Monday, October 15, 2012

DIVISIONAL / BRANCH CONFERENCES

கடந்த 10 நாட்களில்  நமது  கோட்ட/ கிளைகளில் நடத்தப் பட்ட மாநாடு  மற்றும் நிர்வாகிகள் பட்டியல்  கீழே :-


சென்னை அயல்நாட்டு அஞ்சலக கிளையின் 32 ஆவது  மாநாடு கடந்த 05.10.2012 அன்று  சென்னை அயல்நாட்டு அஞ்சலக MAIN BUILDING  வளாகத்தில்  சிறப்பாக நடைபெற்றது. அதில்  கீழ்க்கண்ட தோழர்/தோழியர்  நடப்பு ஈராண்டுகளுக்கான  நிர்வாகிகளாக  தேர்ந்தெடுக்கப்பட்டனர் 

கிளைத் தலைவர் :  தோழியர். மங்களநாயகி சுந்தரராஜன் 
கிளைச் செயலர் : தோழர். D . ராய் 
கிளை நிதிச் செயலர் : தோழியர் . J . கண்ணகி 


தாம்பரம் அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு  கடந்த 07.10.2012 அன்று  தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கோட்ட மாநாட்டில் நடப்பு ஈராண்டுகளுக்கான  நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் .

கோட்டத் தலைவர் :  தோழர் D.  ரமேஷ்  தாம்பரம் கிழக்கு. 
கோட்டச் செயலர்  : தோழர் B . செல்வகுமார், தாம்பரம் HO 
கோட்ட நிதிச் செயலர் :தோழர். M.D. ஜான் பால்ராஜ் , தாம்பரம் HO 


தாம்பரம் அஞ்சல்  நான்கின் கோட்ட மாநாடு அம்பத்தூர் - கவரப்பேட்டை  T.J.S. திருமணமண்டபத்தில்  கடந்த 13.10.2012 அன்று  சிறப்பாக நடைபெற்றது. அதில் தாம்பரம்  கோட்ட  அஞ்சல் நான்கின் நிர்வாகிகளாக  கீழ்க்கண்ட  தோழர்கள் ஏகமனதாக  தேர்ந்தெடுக்கப் பட்டனர் 

கோட்டத் தலைவர் : தோழர். N . அனுமந்தன் , தபால்காரர் , ஆவடி பாசறை 
கோட்டச் செயலர் : தோழர். G . சுரேஷ் பாபு , தபால் காரர் அம்பத்தூர் HO 
கோட்ட நிதிச் செயலர் : தோழர்.A . அப்துல் கரீம், தபால்காரர், S.V. நகர் .


ராணிப்பேட்டை அஞ்சல் மூன்று கிளையின் 21 ஆவது  மாநாடு கடந்த 14.10.2012 அன்று  வாலாஜா அஞ்சலகத்தில்  சிறப்பாக  நடைபெற்றது . அதில் நடப்பு ஈராண்டுகளுக்கான நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். 

கிளைத்  தலைவர்  : தோழர். G . மணி, POSTMASTER , ராணிப்பேட்டை HO 
கிளைச் செயலர் : தோழர். S . தனசேகரன் , P.A. ஆற்காடு .
கிளை நிதிச் செயலர் : தோழர். A.I. Md. இலியாஸ் .

தேர்ந்தெடுக்கப் பட்ட   நிர்வாகிகளின் பணி  சிறக்க தமிழ் மாநில அஞ்சல் மூன்றின்  இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .

ராணிப்பேட்டை  மாநாட்டுக் காட்சிகள் :-