Friday, November 30, 2012

வாழ்த்துகிறோம் ! நீடு வாழ !


Flowers Bouquets

திருவரங்கம் அஞ்சல் மூன்று  கோட்டச்சங்கத்தின்  தலைவர் 
அருமைத் தோழர் .M . திரிசங்கு  அவர்கள் 
தனது 40 ஆண்டு கால இலாக்கா சேவை முடித்து 
இன்று பணி  நிறைவு பெறுகிறார்.

அவரது சீரிய தொழிற் சங்கப் பணி 
போற்றுதலுக்குரியது . அவர்தம் பணி  காரணமாகவே 
திருவரங்கம் கோட்டம்  மாநிலச் சங்கத்துடன் ஒன்று பட்டு 
பணியாற்றிட  ஒரு  இணக்கமான  சூழ்நிலை உருவானது .

அவர் நீண்ட ஆயுளுடன்  எல்லா நலமும் பெற்று 
வாழ்ந்திட  மாநிலச் சங்கத்தின்  மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.  
Flowers Bouquets


39 வருடங்கள் தொடர்ந்து  தொய்வில்லா இலாக்கா பணி  !
30 ஆண்டுகள் தொடர்ந்து  தொய்வில்லா தொழிற்சங்கப் பணி  !
தலைவர் KVS அவர்கள்  விட்டுச் சென்ற இடத்தில்  தளராமல் 
அம்பத்தூர் செயலர் பணி  !
60 வயதிலும் 20 வயது இளைஞராக அசராத  தொழிற் 
சங்கப் பணி  !
பாசம் மாறாத வெள்ளை உள்ளம் !
இதுதான் எங்கள் தோழர். ஜெயசீலன் !
அவரின்  பணி  நிறைவு விழாவில் நாம் சங்கமிப்போம் !
வாருங்கள் அம்பத்தூர் நோக்கி !
வாழ்த்துங்கள்  அவர்தம்  நலம் நோக்கி !

அம்பத்தூர் அஞ்சல் மூன்று கிளைச் செயலர் தோழர். K . ஜெயசீலன் அவர்களின்  பணி  நிறைவுப் பாராட்டு விழா !

நாள் : 30.11.2012  வெள்ளி                                          நேரம் : மாலை : 05.00 மணி 

இடம் : அம்பத்தூர் தலைமை அஞ்சலகம்,  சென்னை  600 053.

அன்புடன்  வாழ்த்த அனைவரும் வருக ! வருக ! 
Flowers Bouquets