Thursday, April 23, 2015

DIVISIONAL CONFERENCE OF COIMBATORE P 3 UNION - LARGEST DECOMCRACY GIVEN THE STRONGEST MANDATE



கோவை அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் 43 ஆவது கோட்ட மாநாடு கடந்த 18 மற்றும் 19.04.2015 இரு தினங்கள் கோவை தலைமை அஞ்சலக வளாகத்தில் கோட்டச் சங்கத்தின் தலைவர் தோழர். R . வேலுச்சாமி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 

மாநாட்டில் மாநிலச் சங்கத்தின் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ், மாநிலச் செயலர் தோழர். J . ராமமூர்த்தி, மாநில நிதிச் செயலர் தோழர் . 
A.வீரமணி , மேற்கு மண்டலச் செயலர் தோழர். C . சஞ்சீவி  , மாநில அமைப்புச் செயலர் தோழர். A . ராஜேந்திரன் , மேற்கு மண்டல முன்னாள் செயலர் தோழர். கண்ணன்,  மூத்த தலைவர் தோழர். M . சுதாகரன், PSD கிளைச் செயலர் தோழர். சந்திரசேகரன் ,  நீலகிரி கோட்டச் செயலர் தோழர்.  சேகர், கோபி கிளைச் செயலர். தோழர்  கார்த்திகேயன் , அஞ்சல் நான்கின் மூத்த தலைவர் தோழர். கருணாநிதி  உள்ளிட்ட தொழிற்சங்க முன்னோடிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாநாட்டில் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.  தலைவர், செயலர், நிதிச் செயலர் பதவிகளுக்கு போட்டி இருந்தது. 284 ஊழியர்கள் கலந்துகொண்டு தங்களது ஜனநாயக கடமை ஆற்றியது சிறப்பாக இருந்தது.  கோட்ட தலைவர், கோட்டச் செயலர், கோட்ட நிதிச் செயலர்  தேர்தல்களை முறையே,  மாநிலத் தலைவர் மாநிலச் செயலர், மாநில நிதிச் செயலர் நடத்தி வைத்தனர்.  அடையாள அட்டை, வாக்கு சீட்டு, தனித் தனியே பூட்டப் பட்ட வாக்கு பெட்டி, தனித் தனியே  பூத் , தனித் தனியே  PRESIDING OFFICER  என்று அமைத்திருந்ததும் ,  தேர்தல் சிறிதும் சலசலப்பின்றி அமைதியாகவும் நடைபெற்றதும், அதுவும் 284 உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து  தனித் தனியே  வாக்களித்ததும்   மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. 

மிகப் பெரும் ஜனநாயக கடமை சிறப்பாக நிறைவேற்றப்பட்டது. வென்றவர் , தோற்றவர் பாகுபாடின்றி  , தோற்றவர்களும்  அமைப்பின் இதர பதவிகளில் கொண்டு வரப்பட்டதும் , அனைவரும் கலந்து கொண்ட பொது அரங்கு நிகழ்வும் , இரவு 08.15 வரை  பொது அரங்கு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதும் , அதில் இறுதி வரை 80 தோழர்களுக்கு மேல் கலந்துகொண்டதும் , என்று  ஒவ்வொன்றுமே சிறப்பாக , இதர கிளைகளுக்கு முன் மாதிரியாக நடைபெற்றது.  மாநாட்டை எல்லா வகையிலும் சிறப்பாக ஏற்படுத்திக் கொடுத்த  கோட்டச் சங்க நிர்வாகிகள் பாராட்டுக்குரியவர்கள்  ஆவர்.

அதிக வாக்கு வித்தியாசத்தில் தலைவர், செயலர் , நிதிச் செயலர் என்று மூவருமே  தேர்ந்தெடுக்கப் பட்டனர். 

கோட்டத் தலைவர் :  தோழர். R . வேலுச்சாமி , P A ., R .S . PURAM  HO 
கோட்டச் செயலர் : தோழர். D. எபினேசர் காந்தி, ACTT , கோவை HO 
நிதிச் செயலர்         : தோழர். A . வெங்கடேசன், P .A ., R .S . புரம்  HO 

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! நிகழ்வில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு .
கோட்டத் தலைவர், கோட்டச் செயலர், நிதிச் செயலர்