Wednesday, July 22, 2015

DIVISIONAL CONFERENCE OF PUDUKKOTTAI A GRAND SUCCESS !


கடந்த 18.7.2015 அன்று காலை புதுக்கோட்டை மேனா  திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை அஞ்சல் மூன்று சங்கத்தின் 35 ஆவது ஈராண்டு மாநாடு  சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டு நிகழ்வுகளுக்கு , கோட்டச் சங்கத்தின் தலைவர் தோழர். K .R . கண்ணன் அவர்கள் தலைமையேற்றார்.  கோட்ட மகிளா கமிட்டி தலைவர் தோழியர்.  K .நாக ஜெயம் முன்னிலை வகித்தார். 

மாநாட்டில் சம்மேளன செயல் தலைவர் தோழர். A . மனோகரன் , அகில இந்திய தலைவரும் மாநிலச் செயலருமான  தோழர். J . இராமமூர்த்தி, மாநிலச்  சங்கத்தின் உதவி நிதிச் செயலர் தோழர். R . பெருமாள் , மாநில அமைப்புச் செயலர்  தோழர். ஜோதி ,  FNPO  அஞ்சல் மூன்றின் முன்னாள் மண்டலச் செயலர்  தோழர். ஸ்ரீதரன் , அஞ்சல் நான்கின்  முன்னாள்/ இந்நாள் கோட்டச் செயலர்கள் தோழர். பார்த்திபன், தோழர். வீரையன் , தோழர். நாகராஜன் , NFPE  GDS  சங்க கோட்டச் செயலர் தோழர். ஜானகிராமன் உள்ளிட்ட  தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாநாட்டில் நடப்பு  ஈராண்டு காலத்திற்கு கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.  

கோட்டத் தலைவர்                : தோழர். K .R . கண்ணன் 
கோட்டச் செயலர்                   : தோழர். R . குமார் 
கோட்ட நிதிச் செயலர்          : தோழர். K . வைத்தீஸ்வரன் 

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க  மாநிலச் சங்கத்தின் அன்பான வாழ்த்துக்கள் !