Thursday, January 8, 2015

PM LIKELY TO APPROVE TASK FORCE RECOMMENDATIONS - PRESS NEWS

Return to frontpage
Task Force proposes to divide India Post into five biz verticals
Prime Minister Narendra Modi is expected to review a report on the revival of India Post soon.

Official sources said that Minister for Communications and Information Technology Ravi Shankar Prasad has approved the task force report and will submit it to the prime minister for a review.

The task force had submitted its report to Prasad in December, recommending division of India Post into five verticals, including one each for banking, insurance and e-commerce, with India Post being the holding company.

“The minister is expected to meet the prime minister on Wednesday for an in-principle approval. The task force has highlighted priority areas, which would give a fillip to our postal department,” an official told BusinessLine.

The Centre is also investing ₹5,000 crore for IT modernisation in India Post.

He said priority tasks include providing banking and insurance services to the public and making e-commerce companies such as Amazon, Flipkart and Snapdeal use India Post’s services.

“The main purpose is to utilise the network in line with the Prime Minister’s vision of reaching rural areas for financial services through innovation and digital connectivity instead of mere postal services,” the official added.

The task force, chaired by former Cabinet Secretary TSR Subramanian, was set up by the Prime Minister last year.

The idea was to leverage India Post’s wide reach across India.

Snapdeal has already partnered with India Post to work on bringing thousands of weavers and artisans from Varanasi on its website. The online company has launched a pilot with India Post to set up facilitation desks at Varanasi post offices to enable local weavers to sell their products on its platform.

THE LOKPAL AND LOKAYUKTAS ACT, 2013 - SUBMISSION OF DECLARATION OF ASSETS AND LIABILITIES BY THE PUBLIC SERVANTS.

Wednesday, January 7, 2015

ARE THE POSTAL CLERKS 'A TESTING RAT' FOR INFOSYS ?

INFOSYS  நிறுவனத்தின் சோதனை எலிகளா 
தமிழகத்து அஞ்சல் எழுத்தர் ?

கடந்த  இரண்டு நாட்களாக நாடு முழுவதும்  CBS  அலுவலகங்களில்  EOD கொடுக்க முடியாமல்  மறுநாளைக்கான BOD  செய்ய முடியாமல் , COUNTER  இல் வந்த CUSTOMER  களிடம் பதில் சொல்ல முடியாமல் ,  வேறு வழியில்லாமல் வாங்கிய பணத்தையும்  VOUCHER  களையும் வரவு வைக்க முடியாமல் இரவு பகலாக தூக்கம் தொலைத்து ,  பொது மக்களிடம் 'அடி உதை'  வாங்காத குறையாய் , வசவுகளை மட்டுமே வாங்கி  தன்  பணியை இன்றுதான் முடித்தான்  நம் தோழன்  . 

இதில் தமிழகத்து  தோழனுக்கு  சிறப்பான இடம் உண்டு . 
ஏன் தெரியுமா ? நாம் தானே  சோதனை எலிகள் !  
யாருக்கு ? INFOSYS  நிறுவனத்திற்கு  !. 
ஏன் சோதனை எலிகள் ஆனோம் ? 

'எத்தனை அடித்தாலும் வாங்குகிற வடிவேலு 'வை காரணம் கேட்க
'அதில ஒருத்தன்  என்ன நல்லவன்னு சொல்லிட்டான்மா  ' என்று கூறும்  திரைப்பட வசனம் போல, நம்மை நல்லா வேலை பார்க்கிறான் ' னு  நம்முடைய  உயர் அதிகாரிகள்  சொல்லி விட்டார்கள்  அல்லவா ?

எப்படி ?  

இந்தியாவிலேயே CBS MIGRATION  முதன் முதலில் துவங்கியதும்  தமிழகத்தில்தான் .. மிக அதிக அலுவலகங்கள் MIGRATE செய்யப் பட்டதும் தமிழகத்தில் தான் ... அதுவும் அதிவேக எண்ணிக்கையில்............

அதாவது 05.01.2015 இலாக்கா புள்ளி விபரப்படி MIGRATE  செய்யப்பட  அலுவலகங்கள் :-

தமிழகத்தில் H.O.  - 94        S.O.s -  289    மொத்தம் - 383 அலுவலகங்கள் 
பீகார்                  H.O. -  1          S.O.  -   NIL    H.O. -  சத்தீஸ்கர்  - 1  S.O. - NIL 
குஜராத்             H.O. -  4          S.O.  -   NIL   ஹரியானா - H.O. -  4          S.O.  - NIL
ஹிமாச்சல்     H.O. -  3          S.O.  -   NIL   ஜார்கண்ட்  -  H.O. -  8          S.O.  - NIL 
கேரளா              H.O. - 13          S.O.  -   NIL  மத்திய பிரதேஷ் H.O. - 14   S.O. - NIL 

இப்படிப் போகிறது பட்டியல் .... உங்களுக்குத் தெரியாது .. ஆனால் நம்முடைய  அதிகாரிகளுக்கு  நன்றாகவே தெரியும்  !

இப்படி வேகமாக  செய்து முடிக்க நம்முடைய அதிகாரிகள் காட்டும் அதீத ஆர்வம்............... , அது சரியாக இருக்குமானால் நமக்கும் நிச்சயம் சரியாக ஏற்றுக் கொள்ள முடியும். அதில் தவறில்லை . ஆனால் 1100 கோடி 'ஏப்பம்' விட்ட  INFOSYS  COMPANY  யை........  வாங்கிய  பணத்திற்கு  வேலை செய்ய வைக்க நம்முடைய அதிகாரிகளால் முடியவில்லை  அல்லவா ? 

MOCK  MIGRATION செய்து பார்த்துதானே  DATA CENTRE  இல் DATA MIGRATE செய்கிறார்கள் ? 

அப்படியானால்   ஒவ்வொரு அலுவலகத்திற்கும் எத்தனை கணக்குகள் உள்ளது என்ற எண்ணிக்கை அவர்களுக்கு தெரியாதா ?  

எத்தனை அலுவலகங்கள்  ' இடையில் வரும்  ஒரு SUNDAY  அல்லது  HOLIDAY  யில்  MIGRATE  செய்ய முடியும் என்று தெரியாதா ?

அதற்கு ஏற்றார்போல அலுவலக எண்ணிக்கையை நிர்ணயித்துக் கொள்ள தெரியவே தெரியாதா ?

 03.01.2015 ஒரே  நாளில் 103 அலுவலகங்கள் MIGRATE செய்ய வேண்டிய அவசியம் என்ன ? 

அந்த DATA  06.1.2015 வரை  MIGRATE  செய்து முடிக்க முடியவில்லையே  ஏன் ? 

அதுவரை  பொதுமக்களிடம்  உதை வாங்கியது.... வாங்குவது  யார் ?அப்பாவி அஞ்சல் ஊழியன் தானே  ? 

1100 கோடி வாங்கிய INFOSYS காரன்  அல்லவே ?

06.01.2015 BOD  06.01.2015 மாலை 06.45 க்கு  துவக்கலாம் என்று  வெட்கமில்லாமல் MAIL  கொடுப்பதை  நம் அதிகாரிகள் எவ்வாறு ஏற்கிறார்கள் ? 

நாம் ஒரு TRANSACTION  செய்யவில்லை என்றால்கூட   RULE  16 கொடுக்கத் துடிக்கும் அதிகாரிகள் ,  நாடுமுழுதும் உள்ள 1539 MIGRATE  செய்யப் பட்ட அலுவலகங்கள்  இரண்டு நாட்களாக ஸ்தம்பித்தபோது  என்ன செய்தார்கள் ?   

பல லட்சம் மக்களின்  சேவை பாதிக்கப்பட்டதற்கு என்ன செய்தார்கள் ?

CUSTOMER  இழப்புக்கு என்ன செய்யப் போகிறார்கள் ? ஓ ! குட்டி அதிகாரிகள்தான்  நம் ஊழியனின் 'பெண்டாட்டி' பேரிலும் 'பிள்ளை' பேரிலும்  பல நூறு கணக்குகள் துவக்கிடச் சொல்லுகிறார்களே ? பார்த்துக்கொள்ளலாம் ... என்ற நினைப்போ  ? 

எத்தனை மனித உழைப்பு நாட்கள் வீணடிக்கப்பட்டன ? இந்த நஷ்டத்தை எவர் தலையில் கட்டுவது ? 

இத்தனைக்கு  இது முதல் தடவை அல்லவே ?  ஒவ்வொரு திங்கள் கிழமையும்  CBS  அலுவலகங்களில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அல்லவா நம் அப்பாவி ஊழியன் உள்ளே நுழைய வேண்டி உள்ளது ? .  

இதற்கெல்லாம் ஏன்  INFOSYS  COMPANY  மீது 
சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கவில்லை ? .  

ஏன் நஷ்ட ஈடு கோரவில்லை ? 

ஏன்  CONTRACT  ஐ ரத்து செய்யவில்லை ? 

ஏன் BLACK  LIST  செய்யவில்லை ? 

ஓ ! அதெல்லாம்  மேலிடத்து சமாசாரமோ ? இருக்கட்டும் ... 
அப்படியே இருக்கட்டும் ... 

அது எங்கள் வேலையில்லை என்றாலும் கூட ... என் அப்பாவி ஊழியனை ஏன் கொடுமைப் படுத்துகிறீர்கள் ? 

ஏன் இந்த 'பேய்' வேகம் ?  ' ஓட்டைச் சட்டி' என்று இத்தனை மாதங்களுக்குப் பிறகு புரிந்த பின்னுமா   MIGRATION இல் வேகம் ? 

இத்தனை  பிரச்சினை இருக்கும் போது எந்த மாநிலங்களிலும் இல்லாமல்  இங்குமட்டும் ,  ஏன் இந்த வேகம்?   சற்று நிறுத்திதான் செய்யலாமே ? 

இத்தனைக்கும் வங்கித்துறையில் இன்று பல நிறுவனங்கள் 'FINACLE ' சரியில்லை என்று கழற்றி விடுவதாக  பத்திரிகை செய்தி தினம் தோறும் வருகிறதே ?  பார்க்கவில்லையா ?

"(UBI), which markets itself as 'the bank that begins with U', has taken a U-turn a day after it blamed deficiencies in Infosys' software"  ...BUSINESS STANDARD - 07.01.2015.

எது என்ன ஆனால் என்ன ? ... அஞ்சல் ஊழியன்... தமிழக அஞ்சல் ஊழியன் ...  பன்னாட்டு நிறுவனங்களின்  சோதனை எலிகளாக்கப்பட்டு வருகின்றான் ...  இது சரியா ?


இது எவருடைய குற்றம் ?  காலத்தின் குற்றமா ? கர்த்தாவின்  குற்றமா ? 

தேவை  மறு பரிசீலனை .... 
சொல்லிப் பார்க்கிறோம் ....
கேட்டுப் பார்க்கிறோம் .... 
எழுதிப் பார்க்கிறோம் ....  

பிரச்சினை தீரவில்லை எனில் ... 
போராட்டம் ஒன்றே வழி என்று நம்மைத் தள்ளுவார்களேயானால் ... 
வேறு வழியில்லை ..களம் இறங்கிடுவோம் .. 
பிரச்சனைகளை  வீதிக்கு கொண்டுவருவோம் ...  

சாவதற்கு நாம் சோதனை எலிகளல்ல என்று காட்டுவோம் ....  
பால் கொடுத்து உயிர்காக்கும் பசுக்கள் ... 
பாதிப்பு வந்தால்  கொம்பு சுழற்றி   களம் இறங்கும் 
என்பதை புரிய வைப்போம் ...

விரைவில் போராட்டத்திற்கு தயாராவோம் ! 

SUBJECTS PLACED FOR THE BI-MONTHLY MEETING WITH THE PMG, CR PROPOSED TO BE HELD ON 20.1.2015


CIRCLE UNION ADDRESSED CPMG, TN ON CASUAL LABOUR / GDS SUBSTITUTES ISSUES



CIRCLE UNION ADDRESSED CPMG, TN ON FIXATION OF TRCA TO BPMs


KRISHNAGIRI DIVL CONFERENCE A GRAND SUCCESS !

கிருஷ்ணகிரி கோட்டத்தின் அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு கடந்த 04.01.2015 ஞாயிறு அன்று கிருஷ்ணகிரி தலைமை அஞ்சலக வளாகத்தில் கோட்டத் தலைவர் தோழர். V . ராமமூர்த்தி அவர்கள் தலைமையில்  சிறப்பாக நடைபெற்றது . கொடியேற்று நிகழ்வுக்குப் பின்னர் கோட்ட உதவிச் செயலர் தோழர். G . சிவசங்கரன் அவர்கள் வரவேற்புரையாற்ற,  கோட்டச் செயலர் தோழர். S.செல்வம் அவர்கள் ஈராண்டு அறிக்கை சமர்ப்பிக்க , கோட்ட நிதிச் செயலர் தோழர். K . சத்திய பூங்குன்றன் அவர்கள் வரவு செலவு கணக்கினை சமர்ப்பித்தார்.  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J . இராமமூர்த்தியின்  துவக்க உரையில்  அஞ்சல் இலாக்காவின் இன்றைய நிலை, TASK  FORCE  இன் அறிக்கை, ஏழாவது ஊதியக் குழுவுக்கான போராட்டங்கள்  உள்ளிட்ட பிரச்சினைகளின் நீண்ட உரையினை அளித்தார். அதன் பின்னர் நிர்வாகிகள் தேர்வு  ஏகமனதாக நடைபெற்றது.  கீழ்கண்ட நிர்வாகிகள்  மீண்டு ஏகமனதாக நடப்பு காலத்திற்கான நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். 

தலைவர் :  தோழர். V . ராமமூர்த்தி 
கோட்டச் செயலர் தோழர். S . செல்வம் 
கோட்ட நிதிச் செயலர் : தோழர். K . சத்தியபூங்குன்றன் 

இதன் பின்னர்  நடைபெற்ற பொது அரங்கு நிகழ்ச்சியில்  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் முன்னாள் மாநிலச்  செயலர்  தோழர். V . பார்த்திபன்,  மேற்கு மண்டலச் செயலர் தோழர். C . சஞ்சீவி  ஆகியோர் சிறப்பான உரையினை  அவைக்கு அளித்தனர். தருமபுரி அஞ்சல் மூன்று முன்னாள் செயலர் தோழர். K . அறிவழகன், இந்நாள் செயலர் தோழர். V . பழனிமுத்து, அஞ்சல் அஞ்சல் நான்கின்  கிருஷ்ணகிரி கோட்டச் செயலர் தோழர். S . மணி உள்ளிட்ட  பல்வேறு பொறுப்பாளர்கள்  கலந்துகொண்டு  மாநாட்டில் வாழ்த்திப் பேசினார்.  பொது அரங்கு நிகழ்வுக்குப் பின்னர் மாநாடு இனிதே நிறைவுற்றது. மாநாட்டு ஏற்பாடுகளை  சிறப்பாகச் செய்திருந்த கோட்டச் செயலர்  தோழர். S . செல்வம் அவர்களுக்கு நம் பாராட்டுக்கள்.  தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! நிகழ்ச்சியில் எடுக்கப் பட்ட புகைப் படங்களில் சிலவற்றை கீழே காணலாம் . 




EDITORIAL -- POSTAL CRUSADER -- JANUARY 2015

Task Force Committee Report
Lay Out Plan of Privatization of Department of Posts

A high power committee named as Task Force on leveraging the Post Office Network headed by Shri T.S.R. Subramaian Ex. Cabinet Secretary consisting  8 other members having expertise in other  fields was appointed by Prime Minister of India. The main object of this Committee was stated to study and make recommendations regarding leveraging the Post Office  Network in India and bring it in  line with changing market trends and the emerging competition with focus on mail and parcel services particularly in rural areas upgrading of infrastructure  and technology incorporating the best global practices available as also by introducing new services and participation  of multiple players and to make  the Department of Post financially viable.

When Task Force Committee was appointed many of our Comrades were presuming that Good Days (Achchhe Din) of Postal Department are likely to come. But it was  a question  before us  that when Govt. is attacking all sectors like Railways, Defence, Public Sector Banks, LIC & BSNL etc. Why alone Postal Department will get good days only.

NFPE leaders also met with Chairman of  Task Force  and during the  course of discussion he told that Postal Department  will be  benefited by the recommendations of Task Force and more jobs will be generated and there will be no adverse  impact on staff.

But when the report was published it was clearly an indication of Govt’s hidden agenda to corporatize the main functions of Department of Posts. Accordingly to the report the Deptt. Of Posts will be divided in to six units. i.e.
 
(i) Banking and financial services 
(ii) Insurance  (PLI/RPLI), 
(iii) Distribution of third party products (Services on behalf of private  parties on payment basis), 
(iv) Management of Govt. services 
(v) Parcel & Packets and 
(vi) Communication delivery

First five units are designated as strategic Business units and sixth unit will deliver mails at subsidized rates. Under Deptt. Of Posts a Holding Company “India Post (Financial and other services) Corporation ” will be formed. The Corporation will consist Board of Members and one Chairman from the Board Members.

All the five separate subsidiary Companies will also have separate Boards. In the course of time Govt.  may disinvest of its part of  Holding  and new Corporation will raise fund from share market and thereafter  will  also be listed in share market in future.

It is stated in the report that five subsidiary Companies will make profit and contribute to meet the loss of sixth unit.

The Task Force Committee has also recommended for amendment of Indian Post Office Act 1898 and to bring another Postal Act. “India Post (Financial and other services)” Corporation Act" for reorganization of Deptt. of Posts by creating new Corporate Structure.

Based on the above facts it is crystal clear that the recommendations of Task Force are a layout plan for corporatization and privatization, thereafter just like happened with Telecom Deptt.

So this is the first and foremost duty of every Postal employee to oppose this dangerous and retrograde move of Govt. of India to Corporatize and privatize the Deptt. of Post and defeat it. Entire employees should come under one banner of JCA and oppose unitedly this Task Force Committee report. Our slogan should be -

Save Postal and save India Post”

 If we allow NDA Govt. to corporatize the functions of the Deptt. of Posts, it will be the beginning of end of Govt. run Postal Services in India. The decision of Postal Joint Council of Action (NFPE, FNPO, AIPEU GDS (NFPE) and NUGDS) to go on indefinite strike from 6th May 2015 should also be strengthened further by adding the demand in the Charter of Demands. 

“No Corporatization in Postal Services”

So we should be ready for a do and die battle.

Tuesday, January 6, 2015

CIRCLE UNION ADDRESSED CPMG, TN ON LSG , HSG II , HSG I ISSUES


CIRCLE UNION ADDRESSED CPMG, TN ON NON DECLARATION OF VARIOUS EXAM RESULTS


CIRCLE UNION ADDRESSED CPMG, TN ON FOREIGN POST ISSUE


CIRCLE UNION ADDRESSED PMG, CCR ON CHENNAI CITY CENTRAL DIVISION ISSUE



CIRCLE UNION ADDRESSED PMG, CCR ON THE ANTI LABOUR ACTIVITIES OF SSPOs., CHENNAI CITY CENTRAL DIVISION



CIRCLE UNION ADDRESSED CPMG, TN ON AMBATTUR ACCOUNTANT CASE


CIRCLE UNION ADDRESSED CPMG, TN ON TIRUPPATTUR ISSUE


WILL RAILWAY BE PRIVATIZED ? AIRF GENERAL SECRETARY'S LR TO HONBLE P.M.

இரயில்வே துறையில் 100% அந்நிய முதலீடு கொண்டு வரப்படும் என்றும் உடனடியாக ஒன்பது  ரயில் நிலையங்கள்  தனியார் வசம் விடப்படும் என்று மத்திய அரசு  அறிவித்தது  உங்களுக்கு நினைவிருக்கும். ஆனால் தற்போது  நம் பாரதப் பிரதமர் அவர்கள் கடந்த 25.12.2014 அன்று வாரணாசியில் நடைபெற்ற கூட்டத்தில்  ரயில்வே துறை தனியார் மயம்  ஆக்கப்படாது என்று  பேசியுள்ளார்.  

இது குறித்து ரயில்வே துறையின்  AIRF  சம்மேளன பொதுச் செயலரும்  JCM  NATIONAL COUNCIL  இன்  ஊழியர் தரப்பு செயலருமாகிய  தோழர். சிவா கோபால் மிஸ்ரா  பாரதப் பிரதமர்  உயர்திரு . மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் நகலை கீழே பார்க்கவும். 

நம் துறையிலும்  முன்னாள்  CABINET SECRETARY திரு.  T.S.R.சுப்பிர மணியன் அவர்கள் தலைமையிலான TASK  FORCE  குழு  தனது அறிக்கையை  அரசுக்கு அளித்துள்ளது. அதில்  நம் இலாக்கா 6  பகுதி களாகப் பிரிக்கப்பட்டு அதில் 5 பகுதிகள்  CORPORATISE  செய்யப் பட வேண்டும் என்றும்  அந்நிய முதலீடு அதில் அனுமதிக்கப்பட  வேண்டும் என்றும் தனது  பரிந்துரையை அரசுக்கு அளித்துள்ளது. எனவே  இது குறித்து உடனடியாக நாம் நடவடிக்கையில் இறங்கிட வேண்டும் என்று மத்திய சங்கங்கள் மற்றும் சம்மேளனத்தை நாம் வேண்டுகிறோம்.



RECRUITMENT OF SPORTS PERSONS - RELAXATION OF PROCEDURE- ORDERS

AIPRPA CALLS FOR DEMONSTRATION ON 12.01.2015 AGAINST THE DELAY IN PAYMENT OF ENHANCED FMA

 CHQ of AIPRPA CALLS FOR PROTEST DEMONSTRATIONS 

 AGAINST UNDUE DELAY OVER PAYMENT OF 

ENHANCED FMA TO POSTAL PENSIONERS DRAWING 

PENSION THROUGH POSB


PROTEST DEMONSTRATION 

ON 12-01-2015

All our Circle Unions/Divl/Branch unions

are requested to support and take part

in the programme

BY

NFPE COC 

TAMILNADU CIRCLE

EXPECTED D.A. FROM JANUARY 2015 AS PER AICPI-IW POINTS

DA from January 2015 would be 113% as AICPI-IW for November 2014, remains at 253 for the 4th consecutive month

All India Consumer Price Index for Industrial Workers (AICPI-IW) is at 253 for the past 4 months from August 2014 to November 2014. The trend remains the same. Even for any increase of this index up to 262 in December 2015 (Consumer figure for December is  expected only by January 15th, 2015 )  the D.A. would be 113%.

HEARTFELT CONDOLENCES TO THE BEREAVED COM. PANDU GEN; SEC GDS UNION


HEART FELT CONDOLENCES TO THE BEREAVED
  Com.P.Pandu Ranga Rao
General Secretary, AIPEU GDS (NFPE) and his family for the demise of his father Shri.P.VENKATARATNAM, 85 years on 4.1.2015 morning  at his native near to Sri Kalahasti  (AP) 

OUR ALL INDIA UNION IS RELEASING HAND BOOK - PL RUSH YOUR INDENT TO CHQ

                                                                                             


HAND BOOK 2015 IS READY 
RUSH FOR INDENT WITH OUR CHQ 

SUBSIDIARY COST IS RS. 90/- + (Postage Extra)

PLI SUM ASSURED LIMIT RAISED TO Rs FIFTY LAKHs- GAZETTE NOTIFICATION ISSUED

DTE ORDERS ON REVISION OF HONORARIUM TO I.O.s & P.O.s

Friday, January 2, 2015

CHANGE IN TRAINING SESSION AT PTC, MADURAI ON THE EVE OF PONGAL FESTIVAL

அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம் ! நம்முடைய மாநிலச் சங்கத்தின் சார்பில் கடந்த 30.12.2014 அன்று CPMG (I/C) திரு. BARMMA  அவர்களைச் சந்தித்து  பல்வேறு பிரச்சினைகள் குறித்து  கடிதம் அளித்து பேசிய விபரம்  அன்றைய தேதியில்  நம்  மாநிலச் சங்க வலைத்தளத்தில் தெரிவித்திருந்தோம். இதில் முக்கிய பிரச்சினையான  PONGAL  பண்டிகை  காலத்தில் மதுரை PTC  யில்  உத்திரவிடப் பட்டிருந்த  TRAINING SESSION  மாற்றியமைக்கப் படவேண்டும் என்பதே . அதற்கு அவரும் உடன்  ஆவன செய்வதாக உறுதி அளித்திருந்த விபரம்  தெரிவித்திருந்தோம். 

அதன்படி  எதிர்வரும் 05.01.2015 முதல் 17.01.2015 வரை அறிவிக்கப் பட்டிருந்த  பயிற்சி வகுப்புகள் மாற்றியமைக்கப்பட்டு , இடையில் வரும் 10.01.2015 மற்றும் 11.01.2015 நாட்கள் பயிற்சி வகுப்பு நாட்களாக  அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால்  பயிற்சி வகுப்புகள் அனைத்தும் பொங்கலுக்கு முதல் நாளே , அதாவது 14.01.2015 அன்றே முடிக்கப்பட்டு விடும்.

பயிற்சி வகுப்புக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து  பணிக்கப் பட்டிருந்த 130 ஊழியர்கள் இதனால் பயன் பெறுவார்கள். அவர்கள் அனைவருக்கு  நம் மாநிலச் சங்கத்தின் பொங்கல் நல்  வாழ்த்துக்கள் !  

நம் கோரிக்கையை ஏற்று இதற்கான  முயற்சிகளை மேற்கொண்ட  CPMG (I/C) திரு. BARMMA அவர்களுக்கும் , DPS  HQ  திரு. கோவிந்தராஜன் அவர்களுக்கும் , அதற்கு உறுதுணையாக இருந்த  AD (STAFF ) திரு. ஆறுமுகம் அவர்களுக்கும்  ஊழியர்கள் சார்பாக நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  இது குறித்த DIRECTOR  PTC  அவர்களின் பதிலை கீழே  பார்க்கவும். 

THANKS TO PMG, CCR FOR TAKING EFFORTS TO 'WRITE OFF' MINUS BALANCE CASES IN CHENNAI CITY REGION

அன்புத் தோழர்களுக்கு  இனிய  வணக்கம் .  

மத்திய சென்னை  ,  தென் சென்னை  , தாம்பரம் உள்ளிட்ட சென்னை பெருநகர  மண்டலம்  சார்ந்த   கோட்டங்களில் MINUS  BALANCE  பிரச்சினையில்  பல தோழர்கள்/தோழியர்கள் பாதிக்கப்பட்டு  பல ஆயிரக்கணக்கான ரூபாய்   ஊதியப் பிடித்தம் செய்திட உத்திரவிட்டதை எதிர்த்து  நம்முடைய மாநிலச் சங்கத்தின் சார்பில்  பிரச்சினையை  பலமுறை PMG, CCR  மற்றும் CPMG  அவர்களிடம் கொண்டு சென்றது குறித்து இந்த வலைத்தளத்தில் ஏற்கனவே நாம்  பிரசுரித்திருந்தோம்.  

கடந்த 28.2.2014 இல் இது குறித்து,  சட்ட விதிகளைச் சுட்டிக் காட்டி   ஒரு நீண்ட கடிதத்தை  அளித்து  PMG, CCR  அவர்களிடம் பேசிய விபரமும் ,  அதற்கு இறுதியாக  அவர்,  சட்ட விதிகளுக்கு மாறான,  பிரச்சினைக்கு உள்ளான  MINUS  BALANCE  CASE  களை  பரிசீலித்து 'WRITE  OFF' செய்திட பரிந்துரைப்பதாக உறுதி அளித்ததையும்  தெரிவித்திருந்தோம்.

அதன் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு  தற்போது  CCR  மண்டலத்தில் மொத்தம் ரூ. 43,54,035.00  க்கு 'WRITE  OFF' செய்திட உத்திரவு பெறப்பட்டு  அது செயலாக்கப்பட்டும்  வருகிறது. குறிப்பாக  சென்னை மத்திய  கோட்டத்தில்  தி. நகர், மயிலாப்பூர்  உள்ளிட்ட பல அலுவலகங்களிலும், தென் சென்னை கோட்டத்தில் ST . THOMAS  MOUNT , MADIPPAAKKAM , NANGANALLUR  உள்ளிட்ட  பல அலுவலகங்களிலும்  தாம்பரம்     அம்பத்தூர் HO உள்ளிட்ட  பல அலுவலகங்களிலும்  இந்த  உத்திரவு அமலாகிறது. 

இது குறித்து  நமது மாநிலச் செயலரிடம் ஏற்கனவே  நமது PMG , CCR  அவர்கள் தெரிவித்தபடி, நம் கோரிக்கைக்கு   வந்த பதிலை    கீழே உங்கள்  பார்வைக்கு அளிக்கிறோம். 

இப்படி பெரிய அளவில் 'WRITE  OFF' பெறுவது இதுவே முதன் முறையாகும்.நம் கோரிக்கையை ஏற்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு ரூ.43.5 லட்சம் 'WRITE OFF' பெற்றுத் தந்த  நமது  சென்னை பெருநகர மண்டல PMG திரு. மெர்வின்  அலெக்சாண்டர்  அவர்களுக்கு  நம்  ஊழியர்கள் சார்பாக  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியினை  தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியில் நம்மிடம் உறுதி அளித்தபடி  நீண்ட நாள் பிரச்சினையான  திருவண்ணாமலை , ஆரணி   தலைமை அஞ்சலகப் பகுதிகளுக்கு புதிதாக 15 பிரிண்டர்கள் வாங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறித்தும்  நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

NEW YEAR GREETINGS FROM OUR SECRETARY POSTS AND OUR REQUIREMENTS TO ACHIEVE THE GOAL



புத்தாண்டில் ஒரு சராசரி ஊழியனின் பார்வை !

அன்புத் தோழர்களுக்கு ! வணக்கம் ! நம்முடைய  இலாக்கா முதல்வர் அவர்கள் அனைவருக்கும்  இனிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியுடன்  2014 இல்  நம்முடைய கடின உழைப்புக்கான பாராட்டினையும்  தெரிவித் துள்ளார்கள் !  அவர்களுக்கு நம் அனைவரின் சார்பில் நம்முடைய நன்றி உரித்தாகட்டும் !

நடப்பு ஆண்டில் நம்  இலாக்காவின்  வளர்ச்சி, அதற்கான இலக்கு நிர்ணயம் அதன் தேவைகள் குறித்தும் , மாறி வரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்பவும் , புதிய வணிக வாய்ப்புகளுக்கு ஏற்பவும் நம்முடைய  திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவேண்டியிருப்பது குறித்தும்  தெரிவித்துள்ளார்கள்.  

இலாக்காவின் ஊழியர்கள் என்ற வகையில்,  நம்முடைய இலாக்காவின் வளர்ச்சியில்  நம் எல்லோருக்கும் நிச்சயம்  அதற்கான  கடமை உள்ளது. மிக அதிக அளவில் நம் பங்கும் அதில் உள்ளது.  நம் இலாக்காவே நம் அனைவரின் வாழ்வாதாரம் . நிச்சயம் அந்த திசை நோக்கி நாம் செயல்படுவோம் என்று  உறுதி கூறுகிறோம்.

ஆனால்  அதற்கான அடிப்படை  தேவைகள் குறித்தும்  நிர்வாகம்  தன்  பார்வையை செலுத்த வேண்டியுள்ளது என்பதை  இந்த  நேரத்தில் நாம்  பதிவு  செய்கிறோம். நம்முடைய ஊதிய  உயர்வு , பஞ்சப்படி இணைப்பு போன்ற கோரிக்கைகளை இலாக்காவிடம்  நாம்  வலியுறுத்தவில்லை. அதற்கான  அரங்கு என்பது  வேறு. மத்திய  அரசின்  பார்வையில் அதிகாரிகள் உள்ளிட்ட,  அனைத்து மத்திய அரசு ஊழியர்கள்  சார்பாக  அதனை  நாம்   கொண்டு செல்கிறோம்.  

ஆனால்  நம்முடைய  இலாக்காவில் , நிர்வாக கட்டமைப்பிற்கு ஒரு திசைப் பார்வை மட்டுமே  உள்ளது  என்பதே  நம் ஊழியர்களிடம்  உள்ள  மனத் தாங்கல். அதனை  இந்தப் புத்தாண்டில்  தெரிவிக்க வேண்டிய  கடமை  நமக்கு உள்ளது.

உதாரணமாக 

இலாக்காவின் தகவல் தொழில் நுட்ப மேம்பாட்டுக்கு  ரூ. 4909/- கோடியை 
ஒதுக்கியது  மத்திய அரசு. அதில்    ஒரு     பைசா கூட  நம்முடைய  தகவல் 
தொழில் நுட்ப  அடிப்படை கட்டுமானத்திற்கு அளிக்கப்படவில்லை என்பது வேதனை அல்லவா ? 

2000 - 2004 களில் அளிக்கப் பட்ட காலாவதியான கணினிகள் , PRINTER கள் , UPS - BATTERY கள் , BAR CODE  SCANNER கூட இல்லாத அலுவலகங்கள் -இதனை வைத்துக் கொண்டு "நொண்டிக் குதிரையில் ஏறி டெல்லிப் பட்டினம்போ" என்று விரட்டுவது வேடிக்கையான விஷயமில்லையா?  உடனே பரிசீலிக்க வேண்டிய  ஒரு  அத்தியாவசியமான அவசர அவசியம்  இல்லையா ?   

TECHNOLOGY TRANSFER  என்ற வகையில் மென்பொருள்  அளிப்பதற்கே  ரூ.4909 கோடி பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது சரிதானா ? 

அதுவும் நமது துறைக்கென்று பிரத்தியேகமாக ,  அதன் சட்ட விதிகள் , 
சேமிப்பு வங்கி தொடர்பான நம்முடைய  இலாக்காவின்  தனித்துவமான திட்டங்கள் , காப்பீட்டுப் பகுதியில்  நம்முடைய  இலாக்காவின் தேவைகள்  குறித்தெல்லாம் முறையான ஆய்வு செய்து  அதற்கான  மென்பொருள்  வடிவமைத்துப் பெறாமல் , எவருக்கோ செய்த  காலணியை  நாம் மாட்டிக் கொள்வதற்கு "நம்முடைய  பாதங்களை வெட்டுவது போல"  இன்று  இந்த திட்டங்கள்  நடைமுறைப்படுத்தப்படுவது சரிதானா ? 

இதுபோலத்தான் ,  MAIL OPERATION, FINANCE & ACCOUNTS,  RETAIL OPERATION, RURAL ICT, HR  போன்ற பகுதிகளிலும்  தனித்துவமான  மென்  பொருள் பெறாமல்   வேறு எவருக்கோ செய்தது நமக்கு வழங்கப்படுமா ?

இதனையெல்லாம் சரி செய்திட வேண்டிய கடமை உள்ள, அதற்காக ஒப்பந்தங்கள் போட்டு  (2 YEARS FOR IMPLEMENTATION , 5 YEARS FOR MAINTANANCE) பல நூறு கோடிகள் வாங்கிய நிறுவனங்கள் , பிரச்சினைகளை தீர்த்திட களத்தில் இல்லாமல் ஓடிப் பதுங்குவதும்,   நம் அப்பாவி  ஊழியர்கள்  பிரச்சினைகளைத் தீர்த்திட ' இரவு பகலாக " களத்தில் வேலை செய்ய வேண்டி உள்ளதும்  சரிதானா ? 

"இட்லி   திங்கச் சொன்னது ஒருத்தனையாம்  - ஏப்பம் விடச்சொன்னது இன்னொருத்தனையாம் " என்ற  கிராமத்து பழமொழி இதற்காகத்தான்  வந்ததோ ? 

தினந்தோறும்  எத்தனை எத்தனை  பிரச்சினைகள் ? "கழுதை முதுகில் வைத்த சுமை போல"  எல்லாம் பழகினால் சரியாகிவிடும் என்பதும் சரிதானா ? 

எந்த அளவு "அலைக்கற்றை பரிமாணம் " தேவை என்று கூட அறியாமல் LAPTOP  இல் போடும்  DATA  CARD  க்கு உண்டான  256 KBPS /512 kbps BANDWIDTH  மட்டும்  பெற்று அதில் "மின்னல் வேகத்தில் TRANSACTION"  என்று வெறும்  "அச்சு மற்றும் மின்னணு  ஊடகங்களுக்கு  பேட்டி கொடுப்பது" சரிதானா ?

NET WORK CONNECTIVITY  இல்லாததால் TRANSACTION  செய்திட இயலாமல்  பொதுமக்களிடம்  அடிவாங்கும் அளவுக்கு ஊழியர் அவதியுறுவது தெரியாதா ? எத்தனை ஊரில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டது ?  இது  தெரியவே தெரியாதா ?

இப்போது மேம்படுத்தப்பட்டு விட்டது  என்று இன்னமும் நாம் 'பொய்' கூறிக் கொண்டுதானே   உள்ளோம் ?  பல நாட்கள்  'HANG  OVER ' இல் ஊழியர்படும் அவதி , மறுநாள்  மறந்து விடும் என்று சமாதானம் செய்தால்,  பொது மக்களும்  அப்படியே  சமாதானமாகி விடுவார்களா ?

பல நூறு கோடிகள்  கொடுத்து ஒப்பந்தம் போடும் முன்னரே உரிய தொழில் நுட்ப   மற்றும்  துறை சார் அறிவு கொண்ட  அதற்கான  வல்லுநர் குழு அமைத்து அனைத்து  பகுதிகளையும் ஆய்வு செய்து ஒப்பந்தங்கள் போட வேண்டாமா ?  ஏனோ தானோ வென்று  ஒப்பந்தங்கள் போடப்பட்டு , அதன் பாதிப்புகள் அனைத்தையும்  அடிமட்ட தொழிலாளி தலையில் கட்டி " ஓடு  ஓடு"  என்றால் எப்படி  ஓடுவது  என்று  சிந்திக்க வேண்டாமா ?  

இத்தனைக்கும்  நம் எழுத்தரின் அடிப்படை கல்வித்தகுதி +2 தானே ?  மேலும் அதில் பாதி பேர் ,  பழைய  8TH  STANDARD  QUALIFICATION இல் தேர்வு செய்யப்பட்டு தபால்காரராக /MTS  ஆக பணியாற்றி  பதவி உயர்வு பெற்ற  எழுத்தர் தானே ?  இவர்கள்  ஒரே நேரத்தில்  58 SOFTWARE  நம் துறையில் HANDLE  செய்யும் அளவு  அறிவு பெற்றவர்களா ? 1200 SCREEN SHOT   நினைவில் கொள்ளும் வண்ணம்  தொழில் நுட்ப  அறிவு மேம்பட்ட  தகவல் தொழில் நுட்பத்  துறையில்  உயர் கல்வி பெற்றவர்களா ?  இருந்தும்  இத்தனை பல்நோக்கு உள்ள அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள் என்பது உலகிலேயே எந்தத் துறையிலும் இல்லாத  புதுமை  இல்லையா ?  இது குறித்து என்றாவது , எவராவது  ஒரு வரி பாராட்டியது உண்டா ?  பாராட்டு கூட  ஒரு "ஊக்க மருந்து"  தானே ?

வேறு எந்த மத்திய அரசுத் துறையிலாவது  ஒரே நேரத்தில் 58 SOFTWARE கணினிகளில்  பயன்பாட்டிற்கு உள்ளதா ?  ஏன் ?   தொழில் நுட்ப முதுகலைப் பட்டம் அல்லது  தொழில் நுட்ப பொறியாளர் பட்டம் பெற்ற  உயர் கல்வி பெற்றவர்கள் பணி புரியும் MNC  க்களில் கூட இத்தனை  SOFT  WARE  ஒரு ஊழியர்  கையாள்கிறாரா  ?  இல்லையே !

இவ்வளவு  ஊழியம்  செய்தும், அதுவும் INITIALISATION காலத்தில்  'TRANSITION'  காலத்தில்,  ஊழியர்  தம் பணியில் ஒரு சிறு தவறு செய்தால் கூட, அதனை தொழில் நுட்ப ரீதியாக  சரி செய்திடும்  விபரம் கூட  சிறிதும் தெரிந்துகொள்ளாத சில  கீழ்மட்ட அதிகாரிகள் , தனக்கு "RULE  16 போடுவது தவிர வேறு எதுவும் தெரியாது" என்ற வகையில்  ஊழியர்களை தினம் தினம் பழிவாங்கும் போக்கு  மிகவும் அதிகமாகி உள்ளதே ? அது உங்களுக்கு தெரியுமா ?  பல இடங்களில் கூக்குரல் கேட்கிறதே ? அது உங்களுக்குப் புரியுமா ?

BUSINESS  DEVELOPMENT  கூட்டங்களில்  வெறும் TARGET  பற்றி மட்டும் பேசினால் , அதனை சாதிக்க வேண்டிய அடிமட்ட ஊழியர்  சரியான  WORKING  ENVIRONMENT  இல்லாவிட்டால்  எவ்வாறு சாதிப்பான் என்பது குறித்து  ஆய்வு செய்வது கிடையாதா ? 

வணிக வளர்ச்சி,  மாத  இலக்கு என்ற பெயரில்  'MULTI  LEVEL  MARKETING  COMPANY " கள்  போல "உன் பெண்டாட்டி பேரில்  100 RD கணக்கு" , "பிள்ளை  பேரில் 100 RD கணக்கு" , அடுத்த PREMIUM  மே  கட்டாத  "'பினாமி "  RPLI  பாலிசிகள்  GDS  ஊழியர் சம்பளத்தில் போடு" என்று வணிக  யுக்தியே  சிறிதும் தெரியாத சில  கீழ்மட்ட  அதிகாரிகளின்   தினசரி  நடவடிக்கைகள்  நம் துறையை நிஜமான  வளர்ச்சி  பெற  வைக்குமா ?  வீழ்ச்சி பெற வைக்குமா ? இது குறித்து  சிந்திக்க  வேண்டாமா ? வணிக வளர்ச்சி கூட்டங்களில் பேசுவது உண்டா ? 

EPOST  சேவை எதற்காக துவங்கப்பட்டது என்பதே தெரியாமல், போட்டியில்லாத , எவருமே போட்டியிட முடியாத  இந்த சேவைப் பகுதியை எவ்வாறு விரிவாக்கம் செய்வது என்பது  கூட தெரிந்துகொள்ளும்  அடிப்படை அறிவு (KNOWLEDGE ) இல்லாமல்   "சினிமா நடிகை பிறந்த நாளுக்கு 1000  EPOST  போடு"    "ரசிகர் மன்றம் நீயே  அமை"  என்றெல்லாம் கோமாளித்தனம் செய்யும் கீழ் மட்ட அதிகாரிகளை  உங்களுக்குத் தெரியவே தெரியாதா ?  இவையெல்லாம்  நம் துறையை  வளர்ச்சி பெற வைக்குமா ?  இது குறித்து சிந்திக்க வேண்டாமா ? 

பல ஆயிரக் கணக்கான  காலியிடங்களை நிரப்பவே வேண்டாமா ?  

காலியிடங்களை நிரப்ப போராடி  நடவடிக்கை எடுத்தாலும், தேர்வு முடிவுகள்  வெளி வருவதில்  ஆண்டுக் கணக்காக  ஆகிறதே ? இது சரி செய்யப் பட வேண்டாமா ?  

புதிய  வேலைகளுக்கு  அளவீடு  என்பது வேண்டாமா ? 

இப்படி எத்தனை  எத்தனையோ கேள்விகள் -   சாதாரண அடிப்படை ஊழியனின்  மனதில் - புத்தாண்டு  கேள்விகள் உண்டு !  இவற்றையும்  நிச்சயம் பரிசீலிக்க வேண்டிய கடமை நம்  நிர்வாகத்திற்கு உண்டு ! 

இந்த திசை நோக்கியும் பார்த்தால் மட்டுமே   நம்மால் இலாக்காவை  நினைக்கும் திசையில் , உரிய வேகத்தில் , கொண்டு செல்ல முடியும் ?  ஒரு திசைப் பார்வையில் "இலக்கு " "இலக்கு"  என்று  சாட்டையை சுழற்றினால்  அதில் பெறுவது  நிச்சயம்  வளர்ச்சியாக  இருக்காது . வீக்கமாகவே இருக்கும் .  செயற்கையான வீக்கம்  நோயின் அடையாளம் !

நாம் நோய் பெறப் போகிறோமா ? வளர்ச்சி பெறப் போகிறோமா ? என்பது 
நம் கையில் இருக்கவேண்டும் என்று நிர்வாகம் நினைப்பது போல , நிர்வாகமும் அப்படி  நினைக்கவேண்டும் என்று   இந்தத் துறையின்  ஊழியர்களான நாம்  நினைப்பதில் தவறு எதுவும் உண்டோ ?  சிந்திக்க வேண்டுகிறோம்.

Planning Commission renamed as 'Neeti Ayog'

The Planning Commission, which was established in 1950, will be called 'Neeti Ayog' in its new avatar, months after Prime Minister Narendra Modi announced that it will replaced by a new body.

The decision comes nearly three weeks after Modi held consultations with chief ministers at a meeting where most favoured restructuring of the Socialist-era body but some Congress Chief Ministers opposed disbanding of the existing set-up.

Modi had announced in his 
Independence Day speech that the Planning Commission would be replaced by a new body which is in sync with the contemporary economic world.

While addressing the Chief Ministers on December 7, he had invoked former Prime Minister Manmohan Singh who had said on April 30 last year that the current structure has "no futuristic vision in the post-reform period".
He had pushed for an effective structure which strengthens "cooperative federalism" and the concept of "Team India".

There were indications that the new structure will have the Prime Minister, some Cabinet ministers and some chief ministers along with technocrats and experts in various fields.
 
Source:-The Economic Times

LGO EXAMINATION FOR PROMOTIONS TO P.A.S FOR THE YEAR 2014 HELD ON 23.11.2014 - PROVISIONAL ANSWER KEY RELEASED

Post Office Savings Bank General (Amendment) Rules 2014