Sunday, February 26, 2012

முன்னாள் மாபொதுச் செயலரின் மனம் திறந்த பாராட்டு !

(Comments பகுதியிலிருந்து  )
அன்புத் தோழரே! தங்களது பிப்ரவரி-28 வேலைநிறுத்த அறைகூவல் கவிதை மிக அருமை. உலகமயத்தின் சீரழிவு பாதிப்புகளை மிக எளியதாய் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் ஆக்கிய இக் கவிதை தமிழக அஞ்சல் மூன்றின் இணையத்திற்கு மேலும் சிறப்பு. தமிழ்க் கவிதைகள் தமிழனின் இதயத்தை ஆழ ஊடுருவும் என்பார்கள்; இக்கவிதையும் தமிழக அஞ்சல் ஊழியர்களின் இதயத்தை ஊடுருவி உத்வேகப்படுத்தும் என நம்புகிறேன். வேலைநிறுத்தத் தயாரிப்பு ஆர்ப்பாட்டங்களின் புகைப்படங்கள் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுதும் அஞ்சல் ஊழியர்களை போராட்டகளத்தில் இறக்க அஞ்சல் மூன்று எடுத்துள்ள முன்முயற்சியில் வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள் !
..................................................................................................................................................
.... மதிப்புக்குரிய தோழர். K.R.  அவர்களுக்கு  நெஞ்சார்ந்த நன்றி.......... வாழ்த்துங்கள்.......   வளர்கிறோம் ! வழி நடத்துங்கள் ....   
தியாகத் தலைவர்களாம் K.R. , KVS , KRISHNAN  வழி தொடர்கிறோம் !
...... தமிழ் மாநில அஞ்சல் மூன்று சார்பாக ......J.R.  மாநிலச் செயலர்.
..................................................................................................................................................