Wednesday, June 27, 2012

OBITUARY - SMT. VIJAYALAKSHMI, SPM, WALAJAPET S.O.

வருந்துகிறோம் !

அரக்கோணம் கோட்டத்தைச் சேர்ந்த , ராணிப்பேட்டை கிளையில் உள்ள  வாலாஜா  அஞ்சலகத்தில் துணை அஞ்சலக அதிகாரியாக  பணியாற்றிய  நமது  சங்கத்தின்  அன்புத் தோழியர் . S. விஜயலட்சுமி  அவர்கள்  நேற்று  அலுவலக நேரத்திலேயே  இதயக் கோளாறு காரணமாக  உயிர் நீத்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்  தெரிவித்துக் கொள்கிறோம்.


இந்தத் தோழியர் ,  காஞ்சிபுரம் கோட்டக் கண்காணிப்பாளர்  திரு. R. பாலச் சந்தர் அவர்களின் துணைவியார் ஆவார்கள் .  ஒரு கண்காணிப்பாளரின் துணைவியாராக இருந்த போதும்  நமது சங்கத்தின் மேல் ஆழ்ந்த  பற்று கொண்டு , சங்கம் அறிவிக்கும் எல்லா போராட்டங்களிலும் , எல்லா வேலை நிறுத்தங்களிலும்  முழுமையாக  ஈடுபட்டது  அவரது சிறப்பு.  ராணிபேட்டை கிளையின் முன்னணித் தோழியராக அவர் திகழ்ந்தார் என்பது  நமக்கெல்லாம் பெருமை.


ஆனால் அவரது  திடீர் மறைவு  நமது தோழர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , அவரது கணவருக்கும், ராணிப்பேட்டை கிளையின்  தோழர்களுக்கும் மாநிலச் சங்கத்தின்  ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.!