Thursday, July 5, 2012

01.07.2012 அன்று நடைபெற்ற கோட்ட மாநாடுகள்

திருச்சி  கோட்ட மாநாடு  :-


திருச்சி  கோட்ட அஞ்சல் மூன்றின் 39 வது கோட்ட மாநாடு  கடந்த 1.7.2012 அன்று  சத்திரம்  பேருந்து  நிலையம்  அருகில் உள்ள அன்னதான சமாஜ கல்யாண மண்டபத்தில்  சிறப்பாக நடைபெற்றது..  தோழர். N.G.  செயல் தலைவர், அகில இந்திய  சங்கம், தோழர் . J.R. மாநிலச், செயலர்  தோழர்.
A. மனோகரன், மண்டலச் செயலர்  ஆகியோர்  சிறப்பு அழைப்பாளர்களாகக்
கலந்து கொண்டார்கள்..

நிர்வாகிகள் தேர்தலில் ,  தலைவர் மற்றும்  செயலர் பதவிகளுக்கு மட்டும் போட்டி இருந்தது.. ஜனநாயக பூர்வமாக  தேர்தல்  சிறப்பாக நடைபெற்றது.
எந்தவித சிறு சலசலப்புமின்றி  தேர்தலை நடத்திட  ஒத்துழைப்பு நல் கிட்ட இரு தரப்பு தோழர்களுக்கும்  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி !.


தலைவர் பதவிக்கு இரு வேட்பாளர்களுக்கும் கிடைத்த வாக்குகள் :-
தோழர் . J. ஜானகி ராமன்  .............146
தோழர்.. M. பாண்டியன்     .............. 104

செயலர் பதவிக்கு இரு வேட்பாளர்களுக்கும்  கிடைத்த வாக்குகள் :-
தோழர்.. K.  மருதநாயகம்     ........... 145
தோழர்..N.A. அருண்குமார்    ..........   98

இதர நிர்வாகிகள்  தேர்வு போட்டியின்றி  நடைபெற்றது..  கோட்டப் பொருளராக  தோழர்.. R.  கிரிபாலன்  தேர்ந்தெடுக்கப் பட்டார்.. புதிய நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின்  பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தர்மபுரி  கோட்ட மாநாடு :-


முன்னாள் கோட்டச் செயலர் தோழர்.. C.   ஏழுமலை அவர்கள் அனுப்பிய
E-Mail  செய்தியின் படி :-


தருமபுரி கோட்டத்தின் 29 வது கோட்ட மாநாடு 01.07.2012 அன்று  நடைபெற்றது.  கீழ்க்கண்ட தோழர்கள்  நடப்பு ஈராண்டுக்கு  புதிய 
நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் .

தலைவர் :  தோழர்.. M. ராமலிங்கம் 
செயலர் :    தோழர் . K. அறிவழகன் 
பொருளர் : தோழர். T.  மணிபத்மா 


தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின்  பாராட்டுக்கள்  வாழ்த்துக்கள்..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நாமக்கல் கோட்ட மாநாடு :-

நாமக்கல் கோட்டத்தின் 31 வது கோட்ட மாநாடு 01.07.2012 அன்று  நாமக்கல் தலைமை அஞ்சலகத்தில்  நடைபெற்றது..  மாநிலத் தலைவர் தோழர்.. J. ஸ்ரீ வெங்கடேஷ் , மாநில உதவித் தலைவர் தோழர்.. T. நேதாஜி சுபாஷ்  ஆகியோர்
சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டார்கள்.  நிர்வாகிகள் தேர்வு போட்டியின்றி  ஏகமனதாக நடைபெற்றது..

நடப்பு ஈராண்டின் புதிய  நிர்வாகிகளாக கீழ்கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் .

தலைவர் :  தோழர்.. P.K. ராமசாமி 
செயலர்   :   தோழர்.. P.  சண்முகம் 
பொருளர் :  தோழர்.. S.  பழனி 

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின்
மனம் நிறைந்த  வாழ்த்துக்கள்..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&