Wednesday, October 30, 2013

COM. V. RAJENDRAN, CIRCLE SECRETARY, NFPE P4 UNION RETIRING FROM GOVT. SERVICE



வாழ்த்துகிறோம் !

அஞ்சல் நான்கு மாநிலச் சங்கத்தின்  மாநிலச் செயலர் 
தோழர். V . ராஜேந்திரன் அவர்கள்  எதிர்வரும் 31.10.2013 அன்று  
அரசுப் பணி  நிறைவு பெறுகிறார் , 

அவர் எந்த நேரமும் அனைவரிடமும் முகச் சுணக்கம் இன்றி  சிரித்த முகத்துடன் இனிதே பழகும் பண்பாளர் . தலைவர்  A .G .P . அவர்களிடம் தொழிற் சங்கப் பாடம்  பயின்று , அவர் வழி நின்று  பல்வேறு சோதனைகளுக்கிடையே  அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் பொறுப்பினை  ஏற்றவர். அவர் பொறுப்பேற்ற இரண்டு முறையும் சோதனைகள் தான். ஆனாலும் சோதனைகளை, சாதனைகளாக்கும் மன உறுதியை அவர் பெற்றிருந்தார்  என்பதாலேயே அவரது காலத்தில் அஞ்சல் நான்கு  தலை நிமிர்ந்தது . 

சுயமரியாதைக் கொள்கைகளுக்கு சொந்தக் காரார் . தொழிற்சங்கத்தில் நேர்மையாளர். இப்படி பல பரிமாணங்களைப் பெற்றிட்ட 

                      தோழர். V . ராஜேந்திரன் அவர்கள் 

அரசுப் பணி  நிறைவு பெறும்  நாளில்  அவர் எல்லா நலன்களும் , வளமும் பெற்று  நீடு வாழ தமிழக அஞ்சல் மூன்று சங்கமும்,  தமிழக அஞ்சல் RMS இணைப்புக் குழுவும் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் நாடு கிளையும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை  பதிவு செய்கின்றன . 

அவர்தம் தொழிற் சங்கப்  பணி  தொடரட்டும் !

(குறிப்பு : 31.10.2013 வரை தோழர் . V . ராஜேந்திரன் அவர்கள் மாநிலச் செயலராகத் தொடர்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். முதலில் இந்த வலைத்தள அறிக்கையில் 'முன்னாள்' என்று தவறுதலாக பிரசுரிக்கப்பட்டதற்கு வருந்துகிறோம் )