Wednesday, December 17, 2014

CHENNAI CITY CENTRAL DIVISION CONFERENCE A GRAND SUCCESS


சென்னை மத்திய கோட்டத்தின் கோட்டச் சங்க  மாநாடு கடந்த 07.12.2014 அன்று தி. நகரில் சிறப்பாக நடைபெற்றது .


கோட்ட மாநாட்டில் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில தலைவர்.தோழர். ஸ்ரீ வெங்கடேஷ்தமிழ் மாநில செயலர்.தோழர் J R , அகில இந்திய சங்கத்தின் செயல் தலைவர் தோழர். N.G. ,உதவிச் செயலர் தோழர். A. வீரமணி , மாநிலச் சங்க உதவித் தலைவர் தோழர். V. வெங்கட் ராமன், அஞ்சல் மூன்று முன்னாள் தமிழ் மாநில செயலர் தோழர் .பார்த்திபன் , அஞ்சல் மூன்று தமிழ் மாநில உதவி செயலர் தோழர்.ஜேக்கப்ராஜ்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


நடைபெற்ற  நிர்வாகிகள் தேர்தலில் 
தோழர். R . தேவேந்திரன் அவர்கள் 
கோட்டச் சங்கத்தின் தலைவராகவும்

தோழர் D. ரவி அவர்கள் 
கோட்டச் சங்கத்தின் செயலராகவும் 

போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். 

கோட்டச் சங்கத்தின் நிதி செயலராக 
தோழர் S . பாலசுப்ரமணியன்  அவர்கள் 
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்ந்தெடுக்கப் பட்ட  புதிய  நிர்வாகிகளின் பணி சிறக்க மாநிலச் சங்கத்தின் அன்பான வாழ்த்துக்கள் !