Saturday, January 24, 2015

CIRCLE UNION WISHES ELECTED NEW OFFICE BEARERS OF ARAKKONAM DIVL BRANCH

அரக்கோணம் அஞ்சல் மூன்று கோட்டச் சங்க மாநாடு கடந்த 18.1.2015 அன்று அரக்கோணம் தலைமை அஞ்சலக வளாகத்தில்  கோட்டத் தலைவர் தோழர். S. மலர்வண்ணன் தலைமையில்  சிறப்பாக நடைபெற்றது. கோட்டச் செயலர் தோழர். P . குமார்  அவர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய் திருந்தார்.  

மாநாட்டில் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J. ராமமூர்த்தி,  
மாநில உதவித் தலைவர் தோழர். V . வெங்கட்ராமன் , அஞ்சல் மூன்றின் மாநில நிதிச் செயலர் தோழர். A . வீரமணி , அஞ்சல் மூன்றின் முன்னாள் உதவித் தலைவரும் மூத்த தோழருமான  E . வெங்கடேசன், அஞ்சல் மூன்றின் முன்னாள் உதவித் தலைவரும் மூத்த தோழருமான A . மணி , ராணிபேட்டை அஞ்சல் மூன்றின்  தலைவர் தோழர். V .K . நரசிம்மன், செயலர் தோழர்.S . தனசேகரன், அரக்கோணம் அஞ்சல் நான்கின் செயலர் தோழர். தனஞ்செழியன், ராணிபேட்டை அஞ்சல் நான்கின் செயலர் தோழர். R .G . குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிர்வாகிகள் தேர்தலில்  கீழ்க்கண்ட  தோழர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

தலைவர்     :  தோழர்.  V . நடராசன், SPM , குருவராஜம்பேட்டை   
கோட்டச் செயலர் : தோழர். D.கோதண்டன் , SPM , தக்கோலம் 
நிதிச் செயலர் : தோழர்.  M . லெனின் , S.A., அரக்கோணம் HO 

புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! மாநாட்டில் எடுக்கப் பட்ட புகைப்படங்களில் சிலவற்றை கீழே  பகிர்ந்துள்ளோம் !