Monday, August 17, 2015

CHENNAI CITY SOUTH DIVISION CONFERENCE A GRAND SUCCESS !

கடந்த 15.08.2015அன்று தென் சென்னை கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தின் ஈராண்டு மாநாடு, புனித தாமஸ்  தலைமை அஞ்சலக  வளாகத்தில் அதன் பொறுப்புத் தலைவர்  தோழர். R .கனகவேல் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.  

மாநாட்டில், சுதந்திரப் போராட்டத் தியாகியும்  பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர். R . நல்லகண்ணு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு ஆற்றியது  சிறப்பான அம்சமாகும். 

மேலும் அஞ்சல் மூன்று  அகில இந்திய சங்கத்தின் தலைவரும் மாநிலச் செயலருமான தோழர். J . இராமமூர்த்தி , மாநிலச் சங்கத்தின் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் , அகில இந்திய சங்கத்தின் உதவிப் பொதுச் செயலரும் , மாநில நிதிச் செயலருமான தோழர். A . வீரமணி ,  மாநிலச் சங்கத்தின் உதவித் தலைவர் தோழர். V . வெங்கட்ராமன் ,அஞ்சல் மூன்று மாநிலச்  சங்கத்தின்    முன்னாள்   உதவிச்    செயலர்    தோழர்.  C கருணாகரன், AIPEU  GDS  NFPE சங்கத்தின் அகில இந்திய  துணைப்பொதுச் செயலரும் , தமிழ் மாநிலச் செயலருமான தோழர் . R . தனராஜ், அஞ்சல் நான்கின் மாநில நிதிச் செயலர் தோழர். S . இரவிச்சந்திரன், மத்திய சென்னை  அஞ்சல் மூன்று கோட்டச்  செயலர் தோழர் D. இரவி, வட சென்னை அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். ஏஞ்சல் சத்தியநாதன்  உள்ளிட்ட தோழர்கள்  கலந்துகொண்டு  சிறப்பித்தார்கள்.

மாநாட்டில் கீழ்க் கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக  தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் . புதிய நிர்வாகிகளின்  பணி  சிறக்க  மாநிலச் சங்கத்தின் அன்பான  வாழ்த்துக்கள் !

தலைவர்                                :  தோழர். R . கனகவேல் 
கோட்டச் செயலர்              :  தோழர். N . ராஜேந்திரன் 
கோட்ட நிதிச் செயலர்     :  தோழர். T.  இரவிக்குமார் 

மாநாட்டு நிகழ்வில் எடுக்கப்பட்ட  புகைப்படங்களில் சில  உங்களின் பார்வைக்கு :-