Tuesday, December 7, 2010

வேலூர் கோட்ட மாநாடு  ஒரு வெற்றி மாநாடு.
40 ஆவது வேலூர் கோட்ட மாநாடு கடந்த 05 12 2010 அன்று  வேலூர் தலைமை
அஞ்சலகத்தில் கோட்டத் தலைவர் தோழர் அம்ருத கணேசன் தலைமையில் சிறப்பாக
நடைபெற்றது . மாநாட்டில் மாநிலச் செயலர் தோழர் JR , மாநிலப் பொருளர் தோழர் வீரமணி ,  மாநில துணை  செயலர்  தோழர்  மனோகரன் , அம்பத்தூர் கிளை செயலர்
தோழர் ஜெயசீலன் , அண்ணா சாலை கிளை செயலர் தோழர் தியாகராஜன் , திருவண்ணாமலை கோட்ட CONVENOR  தோழர் பாண்டியன் , தோழர் பிச்சாண்டி , அண்ணாசாலை துணை செயலர் தோழர் ஓம் பாலசந்தர் , முன்னணித் தோழர் தீனதயாளன்   மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஞானசேகரன் , MDMK
மாநில அமைப்பு செயலர்  திரு. ந. சுப்பிரமணி  மற்றும் பெருவாரியான தோழர்கள்
கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
மாநாட்டு ஏற்பாடுகள் , மதிய உணவு  மற்றும் பிரஸ் மீட்  போன்றவை  மிக சிறப்பாக
ஒரு மாநில மாநாடு போல  செய்யப்பட்டிருந்தது பாராட்டுக்குரியது .  நிர்வாகிகள் தேர்வு   ஜனநாயக பூர்வமாக சிறப்பாக நடை பெற்றது .  கடந்த காலங்களில் போட்டிக்
குழுக்கள் இருந்து  ஊழியர் மத்தியில்  கசப்புணர்வு இருந்தது தற்போது  நீக்கப்பட்டு   ஊழியர் அனைவரும் ஒரே பார்வையாக ஒற்றுமையுடன் செயல்பட்டது பாராட்டுக்குரியது. 
மாநாட்டில் நடப்பு ஈராண்டு காலத்திற்கு  கீழ்க் கண்டவர்கள்  தேர்ந்தெடுக்கப்
பட்டார்கள் .
தலைவர்  :  தோழர். B . அம்ருத கணேசன்   செயலர்:  தோழர்  S . வீரன்
                                பொருளர் :  தோழர் K . பழனி
புதிய நிர்வாகிகள் பணி சிறக்க மாநிலச்  சங்கம் வாழ்த்துகிறது. கோட்ட சங்கத்துடன் ஊழியர் நலன்  கருதி ஒற்றுமை கரம் சேர்த்த மூத்த  தோழர் கதிர் அகமது மற்றும் முன்னாள் கோட்ட தலைவர் தோழர் பொற்கை பாண்டியன்  ஆகியோருக்கு மாநிலச் சங்கத்தின் பாராட்டுக்கள் .  வாழ்த்துக்கள்.

=========================================================

கடந்த 28 11 2010 அன்று நடைபெற்ற  சேலம் மேற்கு கோட்ட மாநாட்டில் நமது பொதுச் செயலர் மீது மாறாத பாசமும் அவரது செயல்பாட்டில் மிகுந்த ஈடுபாடும் கொண்ட தோழர்  சஞ்சீவி  அவர்கள் கோட்டச்  செயலராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்  என்பது பாராட்டுக்குரியது.  தோழர்  சஞ்சீவி அவர்கள்  பணி  சிறக்க நம்  மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.  அவரது தேர்வுக்கு   நம்  பாராட்டுக்கள்.
==========================================================