Friday, January 11, 2013

WISH YOU ALL COMRADES A HAPPY PONGAL !






































மண்ணிலே கருவாகி 
மண்ணிலே உருவாகி

மண்ணிலே மாண்டவன் தான் உழவன் -அவன்
மண்ணிற்கும், மக்களுக்கும் தலைவன்

வெள்ளாமை விளைகின்ற பூமி
விளைநிலமே உழவனுக்கு சாமி

பொன்னென்ற ஒரு வார்த்தை 
பொன்னைக் குறித்திடலாம்

மண்ணென்ற ஒரு வார்த்தை 
மண்ணைக் குறிப்பதில்லை

தோழர்களே !

மண்ணென்ற ஒரு வார்த்தை 
மண்ணைக் குறிப்பதில்லை

அது நம் முன்னோரின் மானம்

மானம் காப்பதற்காய்
மறவர்கள் ஏரெடுத்து

வானம் பார்த்தே வரப்புயர்த்தி
வரண்ட நிலமெலாம் ஏருழுத்தி

ஒற்றை விதை விதைத்து
ஒரு கோடி நெல் அறுத்து

பத்துக் கரும்பெடுத்துப் பாகாக்கி 
பசுவின் பாலூற்றி 

ஆலாக்கு நெய்யூற்றி
ஆக்குவோம் பொங்கல்

பொங்கலோ பொங்கலென்று
உழவர்கள் பாடுகையில்

பொங்குமே தைப்பொங்கல்
புலருமே தைத்திங்கள்

பொங்கலோ பொங்கலென்று ! 
பொங்கலோ பொங்கலென்று !