Thursday, September 19, 2013

SOUTHERN REGION STRUGGLE OUTCOME - A SUCCESS TO AFFECTED RMS COMRADE

அன்புத் தோழர்களே !  வணக்கம் !

நமது  COC இன்  தென் மண்டலப் போராட்டத்தில்  RMS  மூன்றின் முக்கிய கோரிக்கை , SSRM  MA  DIVISION  அவர்களால் பழிவாங்கும் முகமாக தேர்வு விடைத்தாள்  INSURED  BUNDLE  ரயில்வே TRACK  இல் விழுந்த பிரச்சினையில், சம்பந்தமில்லாமல் வேண்டுமென்றே குற்றம் சாட்டப் பட்டு  இடமாற்றம் செய்யப் பட்ட  தோழர். ஆபத்து காத்த பிள்ளை அவர்களை மீண்டும் நாகர்கோயில் RMS  க்கு  திரும்பக் கொண்டு வரவேண்டுமென்பது ஆகும் . 

இது ஏற்கனவே  பலமுறை PMG, SR  அவர்களால்   மறுக்கப் பட்ட பின் , நாம் அளித்த   MEMORANDUM பகுதியில் கோரிக்கையாக வைக்கப் பட்டிருந்தது . அந்த பிரச்சினையில் மீண்டும் விசாரணை நடத்தப் பட்டு  அதன் அடிப் படையில்  அந்த தோழர்  மீண்டும் நாகர்கோயில்   RMS  க்கு திரும்ப  பணிக்கு அனுமதித்து உத்திரவு பெற்றார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  இது நமது COC  இன் முயற்சிக்கு கிடைத்த வெற்றி !