Tuesday, February 18, 2014

CIRCLE LEVEL NEWS ON STAFF MATTERS

அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம் ! 


மாநில அளவிலான சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் ! மாநில நிர்வாக அலுவலகத்திலிருந்து உரிய அதிகாரிகளால்  நமக்கு அளிக்கப் பட்ட செய்திகளின் படி இதனை உங்களின் பார்வைக்குத்  தருகிறோம்.

1. LSG  பதவி உயர்வு பட்டியல் வெளியிடுவதில் DATE  OF  CONFIRMATION  என்பது அடிப்படையாகக் கொள்ளப்படும் என்று ஏற்கனவே மாநில நிர்வாகத்தின் முடிவாக அறிவிக்கப் பட்டதை உங்களுக்கு தெரிவித் துள்ளோம். அதன்படி பட்டியல் கோட்டங்களில் இருந்து  பெறப்பட்டு இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறுவதாகவும் எப்படியும் இந்த மாதத் திற்குள் இது நிறைவு செய்யப்படும் என்று  தெரிவிக்கப் பட்டுள்ளது.  

2. ஏற்கனவே HSG I  பதவிகள் நிரப்பப் படாமையால்  நிறைய ஊழியர் களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது என்றும் ,மேலும் இந்த ஆண்டு சுழல் மாற்றல் வேறு செய்ய வேண்டி இருப்பதால் , உடனடியாக  HSG I  பதவிகள் பணி  மூப்பு அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்று கோரியுள்ளோம். இது  உடன் செய்யப்படும் என்று உறுதி அளிக்கப் பட்டுள்ளது.

3. LGO  தேர்வு விடைத்தாள்கள் CMC  இலிருந்து  மாநில நிர்வாக அலுவல கத்திற்கு வந்துவிட்டது. இந்த வார இறுதிக்குள்  தேர்வு முடிவுகள் CONSOLIDATE   செய்யப் பட்டு வெளியிடப்படும் என்று  தெரிவிக்கப் பட்டுள்ளது.

4. தேர்தல் நடைமுறைகள் அறிவிக்கப் பட உள்ளதால் 2011, 2012 இல்  நிரப்பப் படாத காலியிடங்களைச்  சேர்த்து 2013, மற்றும் 2014 க்கான  நேரடி  மற்றும்  LGO  தேர்வுகளுக்கான காலியிடங்கள்  உடனடியாக அறிவிக் கப்பட உள்ளன . அப்படி அறிவிக்கப்பட்டால்  அது அதிகப்படியான காலியிடங்களுக்கான தேர்வாக  இருக்கும்  இதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த முறையாவது  CMC  மூலம் நடைபெறும் தேர்வுகள் விரைவு படுத்தப் படவேண்டும் என்றும் , அனைத்து காலிப் பணியிடங்களும்  முழுமையாக நிரப்பப் பட ஏதுவாக  தேர் வு வினாக்கள்  ஒழுங்கு படுத்தப் பட வேண்டும் என்றும்  நமது அகில இந்திய சங்கத்திற்கு  நாம் கோரியுள்ளோம். இது குறித்து இலாக்கா மட்டத்தில் உடன்  உரிய நடவடிக்கை  வேண்டுகிறோம்.

மாநிலச் செயலர் கடந்த 14.02.2014 அன்று  மத்திய மண்டலத்தின்  இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி முடித்து  கடந்த 16.02.2014 அன்று  ராமநாதபுரம் அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் தேர்தலை நடத்தி வைக்க பொதுக் குழுவை அறிவித்த படி அங்கு சென்றார் . 

அதன்படி  முறையாக  அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத் தேர்தல் நடை பெற்றது . தேர்தலில் கீழ்க் கண்ட நிர்வாகிகள்  நடப்பு ஈராண்டுகளுக்கான நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கோட்டத் தலைவர் :தோழர். M . அப்துல் ரசாக் உமர் ,SPM ,திருப்புல்லாணி 
கோட்டச் செயலர்  :தோழர். A .ஜனார்த்தனம் OFFG . POSTMASTER, ராமநாதபுரம் H.O.
கோட்ட நிதிச் செயலர் : தோழர். A .  அம்பேத்கார் ,P .A ., ராமநாதபுரம் H.O.   

இவர்களின் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !