Friday, February 28, 2014

CIRCLE UNION ON STAFF MATTERS

1. தென் மண்டல PMG அவர்களுடன்  கடந்த 21.01.2014 அன்று  நமது MEMORANDUM மீது பேச்சு வார்த்தை நடத்தியதில் மதுரை வாடிப்பட்டி தோழர் காளிமுத்து  PM GRADE I முதல் நியமனத்தின் போது பழி வாங்கப் பட்டார் என்பதால் அவருக்கு மதுரை நகர்ப் புறத்தில் உள்ள அலுவலகம் வழங்கப் பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டது  குறித்தும் , மீண்டும்  கடந்த 07.02.2014 அன்று  நமது முன்னாள் மண்டலச் செயலர் தோழர். K . நாராயணன் அவர்கள்  இது குறித்து  மாநிலச் சங்கத்தின் சார்பாக PMG , SR  அவர்களை சந்தித்துப்  பேசியதையும்  ஏற்கனவே நமது வலைத்தளத்தில்  தெரிவித்திருந்தோம். 

தற்போது  தோழர்.  K . காளிமுத்துவுக்கு  மதுரை நகரில் உள்ள சுப்ரமணியபுரம்  அஞ்சலகத்திற்கு  பணி  இடமாற்றம் அளித்து PMG , SR அவர்கள் உத்திர விட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நீண்ட காலமாக தேங்கிக் கிடந்த இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்த்து வைத்த தென் மண்டல PMG அவர்களுக்கு  நம் மாநிலச் சங்கத்தின்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

2. இதுபோல  சென்னை பெருநகர மண்டலத்தில் நீண்டகாலமாக  தேங்கிக் கிடந்த  தோழர். R .V . பாலவிநாயகர் , PM  Gr  I  தாம்பரம் IAF P .O .  அவரது வேண்டுகோளின்படி  செங்கல்பட்டு கோட்டத்திற்கு இட மாற்றம் அளித்து  PMG,CCR அவர்கள் உத்திரவிட்டுள்ளார்.

3. இதுபோலவே,  தென் சென்னை பெருங்குடி அஞ்சலக PM Gr  I  ஆகப் பணியாற்றி வரும்  தோழர். கந்தசுப்பிரமணியன்  அவர்களுக்கு  வடசென்னை கோட்டத்திற்கு  இடமாறுதல் அளித்து   PMG, CCR  அவர்கள் உத்திரவிட்டுள்ளார்.  இந்த இரண்டு பேரின் கோரிக்கையை ஏற்றும்  நமது வேண்டுகோளுக்கு இணங்கவும்  உத்திரவு வழங்கிய  PMG, CCR அவர்களுக்கும் , அதற்கு உறுதுணையாக இருந்த  AD STAFF, CCR அவர்களுக்கும்  நம் மாநிலச் சங்கத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.