Friday, February 28, 2014

CONDOLENCE MEETING ON THE DEMISE OF COM. GOPU GOVINDARAJAN, CIRCLE SECRETARY, P4 TN CIRCLE

கடந்த 08.02.2014 அன்று  நம்மை விட்டுப் பிரிந்த  அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். கோபு  கோவிந்தராஜன் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம் , அஞ்சல் நான்கு மாநிலச் சங்கத்தின் சார்பாக 27.02.2014 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் சென்னை CPMG  அலுவலக வளாகத்தில் உள்ள  கூட்ட அரங்கில்   அதன் மாநிலத் தலைவர் தோழர். கண்ணன் தலைமையில்  நடைபெற்றது.  

கூட்டத்தில்  அஞ்சல் நான்கின் பொதுச் செயலர் தோழர். சீதாலட்சுமி , துணை பொதுச் செயலர் தோழர். மொகந்தி , அஞ்சல் நான்கின் மூத்த தலைவர் தோழர். A.G.P.,  நமது சம்மேளனத்தின் முன்னாள் மாபொதுச் செயலர் தோழர். K .R.,  RMS  மூன்றின்  மூத்த தலைவர் தோழர் M . கண்ணையன் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் மாநில பொதுச் செயலர் தோழர். துரைபாண்டியன் , சம்மேளனத்தின் உதவி பொதுச் செயலர் தோழர். ரகுபதி,  தமிழக அஞ்சல் RMS  இணைப்புக் குழுவின் தலைவர் தோழர். K. ராஜேந்திரன்,  இணைப்புக் குழுவின் கன்வீனரும்  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  தமிழக தலைவரும்  ஆன  தோழர். J .R . உள்ளிட்ட  NFPE  இன்  தமிழ் மாநிலச் செயலர்கள் , அகில இந்திய சங்க நிர்வாகிகள்  பல்வேறு கோட்ட கிளைகளின் செயலர்கள் , முன்னணித் தோழர்கள் தோழியர்கள் உள்ளிட்ட சுமார் 200 பேர் கலந்து கொண்டு  மறைந்த  தலைவருக்கு  தங்கள் கண்ணீர் அஞ்சலியை  செலுத்தினர்.

கூட்டத்தில் எடுக்கப் பட்ட புகைப் படங்கள்