Tuesday, April 8, 2014

SPECIAL MEETING AT RAJAPALAYAM BRANCH

ராஜபாளையம் சிறப்புக் கூட்டம் 

ராஜபாளையம் அஞ்சல் மூன்று  கிளையின் சார்பாக  கடந்த 05.04.2014 அன்று மாலை  ராஜபாளையம் தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் மூன்றின் கிளைத் தலைவர் தோழர். R . ஜீவானந்தம் அவர்கள் தலைமையில்  சிறப்புக் கூட்டம் நடைபெற்றது . கூட்ட ஏற்பாடுகளை  அஞ்சல் மூன்று கிளையின்  செயலர் தோழர். P . முருகன் அவர்களும் அஞ்சல் நான்கின் தோழர்  செல்வராஜ் அவர்களும்  சிறப்பாகச் செய்திருந்தனர் . 

கூட்டத்தில் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்களும் மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களும்  கலந்து கொண்டு இலாக்காவின் நிலை , நமது அகில இந்திய மற்றும் சம்மேளனத்தின் போராட்ட நிலைப் பாடு, ஏழாவது ஊதியக் குழு குறித்த  எதிர்வரும் போராட்டங்கள் , மாநிலச் சங்கத்தின் செயல்பாடு  உள்ளிட்ட பல பிரச்சினைகள் மீது   சிறப்புரையாற்றினர் .  

கூட்டத்தில்  சிவகாசி அஞ்சல் மூன்றின் கிளைச் செயலர் தோழர். விஜயகுமார் அவர்களும் கிளைத் தலைவர் தோழர்  மாரிமுத்து அவர்களும்  மற்றும் பல தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .  கூட்டத்தின் இறுதியில்  கலந்துரையாடல்   நடைபெற்றது . சிவகாசி தோழர். மாரிமுத்து மற்றும்    சந்தானமுத்து  ஆகியோர் கலந்துகொண்டு  பல கேள்விகளை  எடுத்து வைத்தனர் . அதற்கு மாநிலச் செயலர்  விளக்கங்களை அளித்தது  சிறப்பாக அமைந்தது . இறுதியாக  கிளைச் செயலர் தோழர் . முருகன் அவர்கள்  நீண்ட விளக்கத்துடனான நன்றியுரை அளிக்க  கூட்டம்  இரவு 09.30 மணியளவில் இனிதே முடிந்தது . 

குறிப்பாக ராஜபாளையம்  மற்றும் விருதுநகர் பகுதியில் இவ்வளவு சிறப்பாக  கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த  ஈடுபாடு மிக்க  இளைஞர் கூட்டம் , சங்கத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு  ஒரு முன்னோட்டமான நம்பிக்கையை விதைத்தது.  ராஜபாளையம் கிளைச் செயலர்  தோழர் முருகன் அவர்களுக்கும்  அஞ்சல் நான்கின்  தோழர் செல்வராஜ் அவர்களுக்கும்  நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த  நன்றியை  தெரிவித்துக் கொள்கிறோம்.