Monday, May 11, 2015

DIVISIONAL CONFERENCE OF SALEM WEST DIVISION A GRAND SUCCESS !

சேலம் மேற்கு அஞ்சல் மூன்று கோட்ட சங்கத்தின்  23 வது கோட்ட மாநாடு கடந்த 10.05.2015 அன்று சேலம் மாநகரில் ஸ்ரீ சரவணா கல்யாண மகாலில் வெற்றிகரமாக நடந்தது. கோட்ட தலைவர்(பொறுப்பு) K.இரத்தினம் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார் . தோழர். C.சுந்தரவடிவேலு வரவேற்புரையாற்றினார்.  பின்னர் கோட்ட செயலர் தோழர்.சி.சஞ்சீவி ஈராண்டறிக்கையை சமர்பிக்க, நிதி செயலர் தோழியர் . K.K.கமலமணி வரவு செலவு கணக்கை சமர்பிக்க மாநாட்டு பொருளாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் அஞ்சல் மூன்றின்  மாநிலச் செயலர் தோழர். J.இராமமூர்த்தி அவர்கள் இலாக்கா நிகழ்வுகள், நாம் எதிர் கொள்ளவிருக்கும் ஆபத்துகள், அதை எதிர்கொள்ள நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். 

தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. போட்டியின்றி அனைத்து நிர்வாகிகளும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உணவு இடைவேளைக்குப் பின்னர் நடைபெற்ற பொது அரங்கு நிகழ்வில்   மாநில நிதிச்செயலர் தோழர்.A.வீரமணி, மாநில உதவித் தலைவர் தோழர். D.எபினேசர் காந்தி, கோவை PSD  கிளைச்செயலர்  தோழர்.P.சந்திரசேகர் R3 மாநிலத்தலைவர் தோழர் K.R.கணேசன்,  அஞ்சல் மூன்று முன்னாள்  மாநிலத் தலைவரும் மூத்த தலைவருமான  தோழர். K.செம்பன், சேலம் மேற்கு அஞ்சல் நான்கு கோட்டச் செயலர்  தோழர். R .பிரகாஷ், சேலம் மேற்கு  GDS(NFPE) செயலர் தோழர்.  அய்யன்துரை,சேலம் கிழக்கு அஞ்சல் மூன்று கோட்ட செயலர் தோழர் ரவீந்திரன் , பொருளாளர் தோழர்.சரவணன் உட்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். 

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகள் 

கோட்ட தலைவர் : தோழர்.வெ.ஜெயராமன்,SPM , வெண்ணந்தூர் 
கோட்ட செயலர் :தோழர்.க.சு.புகழேந்தி ,எழுத்தர் சூரமங்கலம் 
கோட்ட நிதி செயலர் :தோழர் சி.சங்கர்,எழுத்தர் சூரமங்கலம் 

இவர்களின் பணி  சிறக்க  மாநிலச் சங்கத்தின் அன்பான வாழ்த்துக்கள் !
விழா நிகழ்வில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்கள் :-