Thursday, March 20, 2014

BI MONTHLY MEETING OF SOUTHERN REGION AND OTHER PROGRAMMES OF CIRCLE SECRETARY

 BI-MONTHLY MEETING OF SOUTHERN REGION :-

தென் மண்டலத்திற்கான இருமாதங்களுக்கு ஒரு முறையிலான  பேட்டி எதிர்வரும் 04.04.2014 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது . ஊழியர் பிரச்சினைகளை அனுப்பிட கடைசி தேதி : 24.03.2014.  இந்த பேட்டியில் நமது மாநிலத்   தலைவரும் , மாநிலச் செயலரும் கலந்துகொள்கிறார்கள். 

SPECIAL INTERVIEW WITH THE  PMG, SOUTHERN REGION :-

தென் மண்டல PMG அவர்களுடன் 24.03.2014  அன்று சிறப்பு பேட்டி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது . நமது அகில இந்திய சங்கத்தின்  துணைப் பொதுச் செயலாளர் தோழர். N. சுப்பிரமணியன் அவர்கள்  இந்தப் பேட்டியில் PMG, SR அவர்களுடன் கலந்து கொள்ள உள்ளார்கள். 

கோட்டச் சங்க மாநாடுகள் :-

ஸ்ரீரங்கம் கோட்டம் :

ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தின்  மாநாடு எதிர்வரும் 23.03.2014 அன்று ஸ்ரீரங்கம் நகரில் நடைபெற உள்ளது. இதில் நமது அகில இந்திய சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS அவர்களும் , மாநிலச் செயலர் தோழர் J.R. அவர்களும் , சம்மேளனத்தின்  செயல் தலைவர் தோழர். A, மனோகரன் அவர்களும் ,  மத்திய மண்டலச் செயலாளர் தோழர் .R. குமார் அவர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள் .

திருநெல்வேலி கோட்டம் :-

திருநெல்வேலி அஞ்சல் மூன்று சங்கத்தின் கோட்ட  மாநாடு எதிர்வரும் 23.03.2014 அன்று திருநெல்வேலி நகரில் நடைபெற உள்ளது. இதில் நமது அகில இந்திய சங்கத்தின் துணைப் பொதுச் செயலர் தோழர். N.S. அவர்களும் , தென் மண்டலச் செயலாளர் தோழர் .R.V. தியாகராஜபாண்டியன் , மேற்கு மண்டலச் செயலர் தோழர். C. சஞ்சீவி  அவர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள் .

திண்டுக்கல் கோட்டம் :-

திண்டுக்கல் கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தில்  மாநாடு எதிர்வரும் 30.03.2014  அன்று திண்டுக்கல் நகரில் நடைபெற உள்ளது. இதில் நமது அகில இந்திய சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS அவர்களும் , மாநிலச் செயலர் தோழர் J.R. அவர்களும் , சம்மேளனத்தின்  செயல் தலைவர் தோழர். A, மனோகரன் அவர்களும் , முன்னாள் தென் மண்டலச் செயலர் தோழர் K. நாராயணன் அவர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள் .

சிறப்புக் கூட்டம் :-

விருதுநகர் :-

விருதுநகர் கோட்டச் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் எதிர்வரும் 04.04.2014 அன்று மாலை  விருதுநகரில் நடைபெற உள்ளது . இதில்  அஞ்சல் மூன்று மாநிலத் தலைவர் தோழர் . J. ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களும், மாநிலச் செயலர்  தோழர். J.R. அவர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள். 

ராஜபாளையம் :-

ராஜபாளையம் அஞ்சல் மூன்று கிளையின்  சிறப்புக் கூட்டம் எதிர்வரும் 05.04.2014  அன்று மாலை ராஜபாளையம் நகரில் நடைபெற உள்ளது. இதில்  அஞ்சல் மூன்று மாநிலத் தலைவர் தோழர் . J. ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களும், மாநிலச் செயலர்  தோழர். J.R. அவர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள். 

அம்பாசமுத்திரம்  கருத்தரங்கு மற்றும்  பணி நிறைவுப் பாராட்டு விழா :-

அம்பை கிளையில் எதிர்வரும் 06.04.2014  அன்று   கருத்தரங்கு நிகழ்ச்சியும், அரசுப் பணி நிறைவு பெற்ற  தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநில உதவிச் செயலர் தோழர். அம்பை தியாகராஜன் அவர்களுக்கு பணி நிறைவுப் பாராட்டு விழாவும்  இணைந்து நடைபெற உள்ளது.  இதில்  நம் அகில இந்திய சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர். M. கிருஷ்ணன் அவர்களும் ,அஞ்சல் மூன்று மாநிலத் தலைவர் தோழர் . ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களும், மாநிலச் செயலர்  தோழர். J.R. அவர்களும்.தென் மண்டலச் செயலாளர் தோழர் .R.V. தியாகராஜபாண்டியன் அவர்களும்   மற்றும் பல முன்னணி  சங்க நிர்வாகிகளும் கலந்துகொள்ள உள்ளார்கள். 

அஞ்சல் மூன்று மாநிலச் சங்க செயற்குழுக் கூட்டம் :-

தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும்  09.04.2014  மற்றும்  10.04.2014  இரண்டு நாட்கள்  வேலூர் நகரில் , அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் தலைவர் தோழர். J. ஸ்ரீ வெங்கடேஷ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற உள்ளது . மாநில சங்கத்தின் உதவிச் செயலர்  S. வீரன் அவர்களும் , மாநிலச் சங்கத்தின் முன்னாள் உதவித் தலைவர் தோழர் . அம்ருதகணேசன் அவர்களும் முன்னின்று இந்த செயற்குழுவுக்கான வரவேற்புக் குழு அமைத்து  நடத்திக் கொடுக்க அன்புடன் இசைந்துள்ளார்கள்.  இதற்கான முறையான அறிவிப்பு  நிர்வாகிகளுக்கு தனியே அனுப்பப் படுகிறது.