Friday, March 14, 2014

CLOSED MELUR SOUTH P.O. IS NOW RE-OPENED AT THE SAME AREA DUE TO OUR TRADE UNION PROGRAMME OF ACTION AT SOUTHERN REGION

மாநிலச் சங்கத்தின் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி ! 
மூடப் பட்ட அஞ்சலகம்  மீண்டும் அதே பகுதியில் திறக்கப் பட்டது ! 

உத்திரவிட்ட  தென்மண்டல PMG அவர்களுக்கு
நம் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி !

தென் மண்டலத்தில் நமது அஞ்சல் - RMS இணைப்புக் குழுவின் சார்பாக கடந்த 10.01.2014  அன்று நடத்தப் பட்ட தொடர் முழக்கப் போராட்டத்தினை ஒட்டி PMG, SR அவர்களுடன் கடந்த 21.01.2014  நாம் நடத்திய பேச்சு வார்த்தையின் காரணமாக, ஏற்கனவே கடந்த 07.10.2013 இல் மூடப்பட்ட மேலூர் தெற்கு அஞ்சலகம் மீண்டும் திறந்திடப்படும் என்று   தென் மண்டல PMG அவர்கள் நமக்கு உறுதி அளித்ததை ஏற்கனவே  நமது வலைத்தளத்தில் தெரிவித்திருந்தோம்.  

ஏற்கனவே காலி செய்யப் பட்ட கட்டிடத்தை அதன் சொந்தக் காரர் வேறு ஒரு நிறுவனத்திற்கு வாடகைக்கு கொடுத்து விட்டதால் , உடனடியாக வேறு இடம் கிடைக்க வில்லை என்றும் , எனினும் மாற்றுக் கட்டிடம் பார்த்து  அந்த அலுவலகம்  அதே பகுதியில் திறக்கப்படும் என்றும்,அதன் காரணமாகவே கால தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும்  தென் மண்டல PMG அவர்கள் கடந்த 07.02.2014 அன்று  மாநிலச் சங்கங்களின் சார்பில் பேச்சு வார்த்தைக்கு சென்ற  நமது முன்னாள் மண்டலச் செயலர்  தோழர். K. நாராயணன் அவர்களிடம் தெரிவித்திருந்தார் என்பதையும்  நமது வலைத்தளத்தில்  தெரிவித்திருந்தோம். 

தற்போது  மூடப் பட்ட அந்த மேலூர் தெற்கு அஞ்சலகம்  அதே பகுதியில்  புதிய கட்டிடம் பார்த்து மீண்டும் கடந்த 03.03.2014  அன்று  திறக்கப் பட்டது என்று  தென் மண்டல அதிகாரிகள்  நம்மிடம் தெரிவித்துள்ளார்கள் . தோழர்.K.நாராயணனும்  இதனை உறுதி செய்துள்ளார் !  

கொடுத்த வாக்குறுதியை  நிறைவேற்றிய  தென் மண்டல PMG  MS. சாருகேசி  அவர்களுக்கு  நம் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ! இலாக்கா விதி மீறி அடாவடியாக செயல்படும்  தல மட்ட அதிகாரிகள்  இந்த நிகழ்ச்சிக்குப் பிறகாவது   திருந்தட்டும் !