Tuesday, October 27, 2015

CIRCLE UNION LETTER TO DPS, SR ON REVIEW OF SUSPENSION CASE IN DINDIGUL DIVISION

கடந்த 19.10.2015 அன்று தென் மண்டல PMG யுடனான இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியின் போது திண்டுக்கல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளரின்  தொழிலாளர் விரோதப் போக்கு குறித்தும் அவரது இலாக்கா விதி மீறிய  நடவடிக்கைகள் குறித்தும்  புகார் அளித்துப் பேசினோம். மேலும் பழி வாங்கும் நோக்குடன் செய்யப்பட SUSPENSION குறித்து மறு ஆய்வு செய்திடவும்  கோரினோம்.  இது குறித்து DPS  SR அவர்களுக்கு அளித்த கடிதத்தின் நகல் கீழே  அளிக்கப்பட்டுள்ளது. DPS  SR அவர்களை, அவர் விடுப்பில் இருந்த காரணத்தினால் அன்றைய தேதியில் சந்திக்க இயலவில்லை . எனினும் இது குறித்து தொலைபேசியில் அவரது நேர்முக உதவியாளர் மூலம்  தகவல் தெரிவித்தோம்.

தற்போது  தோழர். ஷாகுல் ஹமீது  அவர்கள் இன்றைய  தேதியில் DPS  SR அவர்களால்  REVIEW  செய்யப்பட்டு   SUSPENSIONஇல் இருந்து விடுவிக்கப்பட்டு  பணியில் சேர்ந்தார் என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  உரிய முறையில்  REVIEW  செய்து அந்தத் தோழர்  பணியில் சேர முடிவெடுத்த  DPS SR  அவர்களுக்கு நம்  மாநிலச் சங்கத்தின் நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறோம்.