கடந்த 19.10.2015 அன்று தென் மண்டல PMG யுடனான இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியின் போது திண்டுக்கல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளரின் தொழிலாளர் விரோதப் போக்கு குறித்தும் அவரது இலாக்கா விதி மீறிய நடவடிக்கைகள் குறித்தும் புகார் அளித்துப் பேசினோம். மேலும் பழி வாங்கும் நோக்குடன் செய்யப்பட SUSPENSION குறித்து மறு ஆய்வு செய்திடவும் கோரினோம். இது குறித்து DPS SR அவர்களுக்கு அளித்த கடிதத்தின் நகல் கீழே அளிக்கப்பட்டுள்ளது. DPS SR அவர்களை, அவர் விடுப்பில் இருந்த காரணத்தினால் அன்றைய தேதியில் சந்திக்க இயலவில்லை . எனினும் இது குறித்து தொலைபேசியில் அவரது நேர்முக உதவியாளர் மூலம் தகவல் தெரிவித்தோம்.
தற்போது தோழர். ஷாகுல் ஹமீது அவர்கள் இன்றைய தேதியில் DPS SR அவர்களால் REVIEW செய்யப்பட்டு SUSPENSIONஇல் இருந்து விடுவிக்கப்பட்டு பணியில் சேர்ந்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். உரிய முறையில் REVIEW செய்து அந்தத் தோழர் பணியில் சேர முடிவெடுத்த DPS SR அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwgFRtmFENddW1jlzM47F28skbHGOdRLdqLzcL-X0de48C7gR3UoysixcGuQENfbX6KYbFKCl6HbGUiUvlc2xx0zarDa-092_xcECXUnC13HSv28xdI_Bptiip0EZlIUigIf8w0gHrtQOi/s1600/C.U.+LR+ON+SHAHUL+HAMEED+DGL+SUSPENSION.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwgFRtmFENddW1jlzM47F28skbHGOdRLdqLzcL-X0de48C7gR3UoysixcGuQENfbX6KYbFKCl6HbGUiUvlc2xx0zarDa-092_xcECXUnC13HSv28xdI_Bptiip0EZlIUigIf8w0gHrtQOi/s1600/C.U.+LR+ON+SHAHUL+HAMEED+DGL+SUSPENSION.jpg)