Tuesday, September 16, 2014

DIVISIONAL CONFERENCE OF P3 DIVISIONAL UNION, DHARMAPURI

தருமபுரி அஞ்சல் மூன்றின் 30 ஆவது கோட்ட மாநாடு  கடந்த 14.09.2014 அன்று  கோட்டச் சங்கத்தின் தலைவர் தோழர் M . ராமலிங்கம் அவர்கள் தலைமையில் தருமபுரி ஸ்ரீனிவாசா ஹாலில்  சிறப்பாக நடைபெற்றது. 

கோட்டச் செயலர் தோழர். K . அறிவழகன் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தார். முன்னணித் தோழர். G . பிரேம்குமார் அவர்கள்  வரவேற்புரையாற்றினார். மாநாட்டில் அஞ்சல் மூன்று முன்னாள் கோட்டச் செயலர் தோழர். R . நடராசன், அஞ்சல் நன்கு கோட்டச செயலர் தோழர். முகமது இஸ்மாயில்  உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாநாட்டில் தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயலர் தோழர் J . R . அவர்கள் கலந்துகொண்டு நிர்வாகிகள் தேர்தலை  நடத்தி வைத்தார். உடன் கிருஷ்ணகிரி அஞ்சல் மூன்று கோட்டச்செயலர் தோழர்.
S.செல்வம்  அவர்கள் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டார். நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் கீழ்க்கண்ட தோழர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

தலைவர் : தோழர். C . ஏழுமலை ,SPM , அன்னசாகரம்  S .O .

கோட்டச் செயலர் : தோழர். V . பழனிமுத்து,  S .A ., தருமபுரி  HO 

நிதிச் செயலர் :  தோழர்.  M . ராஜசேகரன் ,  S .A ., தருமபுரி HO 

புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள் !. புதிய நிர்வாகிகள்  தருமபுரி கோட்டச் சங்கத்திற்கென்று புதிதாக வலைத்தளம் துவங்கியுள்ளதாக மாநிலச் சங்கத்திற்கு தகவல் அளித்துள்ளார்கள். வலைத்தள முகவரி : http://nfpep3dharmapuri.blogspot.in/.  இனிய துவக்கம். மீண்டும் வாழ்த்துக்கள். !

கோட்ட மாநாட்டில் எடுக்கப் பட்ட புகைப்படங்களில் சில :-