Wednesday, September 10, 2014

TRICHY AND MAYILADUTURAI DIVISIONAL CONFERENCES

திருச்சி  அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு !

திருச்சி அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் 40 ஆவது கோட்ட மாநாடு  கடந்த 07.09.2014 ஞாயிறு அன்று திருச்சி தலைமை அஞ்சலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.  அஞ்சல் மூன்றின் அகில இந்திய செயல் தலைவர் தோழர். N . கோபாலகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.  கோட்டச் சங்க நிர்வாகிகள் தேர்தலில் கீழ்க்கண்ட தோழர்கள்  போட்டியின்றி   நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். 

கோட்டத்  தலைவர் : தோழர்.  J . ஜானகிராமன், SPM , MK  KOTTAI   S.O.
கோட்டச் செயலர் : : தோழர். K . மருதநாயகம்,  P.A., TRICHIRAPPALLI HPO
நிதிச் செயலர் : தோழர்.R . கிரிபாலன் , P.A. TRICHIRAPPALLI FORT S.O.

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க  மாநிலச் சங்கத்தின்  மனமார்ந்த வாழ்த்துக்கள் !.

மயிலாடுதுறை அஞ்சல் மூன்று பொதுக் குழு !

கடந்த வேலூர் மாநிலச் செயற்குழுவில் எடுக்கப் பட்ட முடிவின் படி  மயிலாடுதுறை அஞ்சல் மூன்று சங்கத்தின் பொதுக்குழுக் கூட்ட அறிவிப்பு  கடந்த 07.09.2014 அன்று  மயிலாடுதுறை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடைபெறுவதாக  தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தால் அறிவிக்கப் பட்டிருந்தது.  அதன்படியே  கடந்த 07.09.2014 அன்று காலை 10.00 மணிக்கு பொதுக்குழு துவங்கியது.  பொதுக் குழுவில்  தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயலாளர்  தோழர். J .R .,  மத்திய மண்டலச் செயலர் தோழர். R . குமார், மாநில உதவி நிதிச் செயலர் தோழர். R . பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு நடத்தி  வைத்தனர்.  AGENDA  வின் படி நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில்  கோட்டத் தலைவர் மற்றும் ,கோட்டச் செயலர் பதவிகளுக்கு மட்டும் போட்டி இருந்தது.  இதர நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   நிர்வாகிகள் தேர்தலில்  தேர்ந்தெடுக்கப் பட்ட முக்கிய நிர்வாகிகள் :-

கோட்டத் தலைவர் : தோழர். P . இரவிச்சந்திரன் , SPM  , கிளியனூர் S .O.
                                              (13 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்)
கோட்டச் செயலர்   :   தோழர்.  K .  துரை ,  SPM , ஆனதாண்டவபுரம்  S .O.
                                              (ஏழு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்)
நிதிச் செயலர்            :  தோழர்.K . வெங்கடேஷ் , M.E.,  D.O., மயிலாடுதுறை .
                                              (போட்டியின்றித் தேர்வு ) 

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள் !