Wednesday, August 3, 2016

TIRUTHURAIPUNDI P3 BRANCH CONFERENCE HELD ON 31.7.2016 - CIRCLE UNION WISHING THE NEWLY ELECTED OFFICE BEARERS

கடந்த 31.7.2016 அன்று திருத்துறைப்பூண்டி கிளையின் 20 - வது மாநாடு திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகத்தில்   மிகவும் சிறப்பாக  நடைபெற்றது. மாநிலச் சங்கத்தின் சார்பில்  மாநில   செயலர்  தோழர். C . சசிகுமார் அவர்களும் கோட்டச் சங்கத்தின் செயலர் தோழர். மோகன்அவர்களும், மன்னை கிளையின் தலைவர் தோழர். சீலன் அவர்களும்   மாநாட்டில் கலந்துகொண்டு  சிறப்பித்தனர்.  

நடப்பு ஈராண்டு காலத்திற்கு  கிளையின்  தலைவராக தோழர். S. நாகலிங்கம் அவர்களும், கிளையின் செயலராக தோழர். P. அன்பழகன் அவர்களும், நிதிச்செயலராக தோழர். L. சுப்பிரமணியன் அவர்களும் மீண்டும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் .  புதிய நிர்வாகிகளின்  பணி   சிறக்க மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.