Saturday, August 27, 2016

TN CONFEDERATION STATE CONFERENCE HELD AT PURASAWAKKAM ON 15.8.2016 A GRAND SUCCESS !

 மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ்மாநில மாநாடு கடந்த 15.08.2016 அன்று காலை நிகழ்ச்சியாக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தர்மபிரகாஷ் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழகமெங்கும் இருந்து  சுமார்  300 க்கும் மேற்பட்ட  சார்பாளர்கள் / பார்வையாளர்கள் கலந்துகொண்டார்கள்.


சுதந்திர போராட்டத் தியாகியும் , பொதுவுடைமை இயக்கத்தின்  முது பெரும் தலைவருமான தோழர்.  சங்கரய்யா  அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து   மாநாட்டில் வாழ்த்துரை வழங்கினார்.  அஞ்சல் தொழிற் சங்க இயக்கத்தின் முது பெரும் தலைவர்  தோழர். A .G. பசுபதி அவர்கள் மாகா  சம்மேளனத்தின்  கொடியினை ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.  மகா சம்மேளன மாபொதுச் செயலர்   தோழர். M . கிருஷ்ணன் அவர்கள் மாநாட்டு  துவக்க உரை   ஆற்றினார். 

மாநாட்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக   தமிழ் மாநில கிளையின் புதிய  நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. 

மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனத்தின் 

தமிழ்மாநில தலைவராக தோழர். J. ராமமூர்த்தி (NFPE, P3) அவர்களும் ,

பொதுச் செயலராக தோழர். M. துரைபாண்டியன் (AG's OFFICE) அவர்களும்,

நிதிச் செயலராக தோழர். M .S . வெங்கடேசன் (ITEF) அவர்களும்,


மாநிலத்துணைத்தலைவர்களாக 

தோழர். R.B. சுரேஷ்,  அஞ்சல்  கணக்கு
தோழர். P. கம்பீரம்,  CGHS

தோழர். S. சாம்ராஜ்,  சாஸ்திரி பவன் COC அவர்களும் 

மாநில உதவிப் பொதுச் செயலர்களாக 

தோழர். A. பாலசுந்தரம் , ராஜாஜி பவன் COC
தோழர். G. கண்ணன், NFPE P4
தோழர். M.P. உதயன் , MCAA
தோழர் .K. ரமேஷ் , NFPE R3
தோழர். B. பரந்தாமன், NFPE R4

அமைப்பு பொதுச் செயலர்களாக 

தோழர். ஜான்சன் , GSO, ATOMIC ENERGY
தோழர். R. தனராஜ், NFPE, GDS
தோழர். A. பாலசுப்ரமணியன், CIVIL A/CS, CATEGORY III
தோழர். ராஜன்,  CTI, GUINDY
தோழர். ஏஞ்சல் சத்தியநாதன், மகிளா கமிட்டி 
தோழர். R..R.ஷ்யாம்நாத் , ITEF,  மதுரை COC
தோழர்.K.K.விஜயன், கோவை  COC
தோழர். T.சந்திரகுமார் TUTICORIN COC
தோழர்.C. சசிகுமார், திருச்சி COC அவர்களும் 

தணிக்கையாளராக      
        
தோழர். M.S. மணிவாசன் , CIVIL ACCOUNTSCATEGORY II  அவர்களும் 
ஏகமானதாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மாலை நிகழ்ச்சியாக அரசுப் பணி  நிறைவுபெற்ற  தோழர். துரைபாண்டியன் அவர்களுக்கு பணி நிறைவுப் பாராட்டு  சிறப்பாக நடைபெற்றது. பாராட்டு விழாவில் பல்வேறு அரங்குகளில் இருந்து தலைவர்கள் கலந்து கொண்டார்கள். விழா நிகழ்வில் எடுக்கப்பட்ட  புகைப்படங்களில் சில உங்களின் பார்வைக்கு :-