Monday, December 28, 2015

CIRCLE UNION ON STAFF MATTERS

====================================================================

கடந்த 24.12.2015 மற்றும் 25.12.2015 இரு நாட்களும் மதுரை  அஞ்சல் பயிற்சி மையத்தில் பயிற்சியில் இருக்கும் 150 க்கும் மேற்பட்ட பயிலாளர்கள்  விடுமுறை தினங்களில்  தங்கள் சொந்த ஊருக்கு செல்லக் கூடாது என்றும் , அந்த நாட்களில் SWACHH  BHARAT  சேவை செய்யவேண்டும்  பயிற்சி மைய இயக்குனரால்  கட்டாயப் படுத்தப் பட்டதாக மாநிலச் சங்கத்திற்கு புகார்கள்  வந்தன. எனவே இந்தப் பிரச்சினையை CPMG  அவர்களிடம் கடிதம் மூலம் எடுத்துச் சென்றோம். CPMG  மற்றும் DPS  HQ  ஆகியோரின்  தலையீட்டினால்  அந்த  ஊழியர்கள் அத்துணை பேருக்கும் பண்டிகை  கால  இரு நாட்களும்  தங்கள் சொந்த ஊருக்கு சென்றிட அனுமதி  அளிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினையில் தலையிட்டு  உத்திரவு  வழங்கிய  CPMG  அவர்களுக்கும் , DPS HQ  அவர்களுக்கும்  நம்  நன்றி !

====================================================================

தென் சென்னை கோட்டத்தின் ST  THOMAS  MOUNT  HO   கட்டிடம்  தொடர்பான பிரச்சினையில்  நாம்  மாநிலச் சங்கத்தின் மூலம்  ஏற்கனவே PMG CCR அவர்களுக்கும்  , பின்னர்  CPMG  அவர்களுக்கும்  கடிதம் அளித்துப் பேசியிருந்தோம். கடிதத்தின் நகல் நம்முடைய அஞ்சல் மூன்று வலைத்தளத்தில் ஏற்கனவே பிரசுரிக்கப் பட்டிருந்தது.  இதன் மீது உரிய நடவடிக்கை  எடுத்திட CPMG  அவர்கள்  PMG CCR , PMG, MM  , EE  CIVIL  ஆகிய மூவரையும்  பணித்திருந்தார்.   இதன்  அடிப்படையில்  கடந்த 22.12.2015 அன்று  இந்த மூன்று  அதிகாரிகளும்  ST  THOMAS  MOUNT தலைமை அஞ்சலகத்திற்கு நேரில் சென்று  பார்வையிட்டு  நம்முடைய  கோட்டச் செயலரையும் அழைத்துப் பேசி  பிரச்சினைகளை  நேரில் கேட்டறிந் துள்ளனர்.  பிரச்சினைகள் மீது  உரிய  நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர்.  நிச்சயம்  பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று  நம்புகிறோம் .

====================================================================